புதன், 27 பிப்ரவரி, 2013

அரசியல் : பயமாயிருக்கிறது..!

உண்மையாவே பயமாதாங்க இருக்கு..!?


சமீபத்திய சம்பவம் : எங்கள் பக்கத்து கிராமமான வடகுத்து கிராமத்தை சேர்ந்த, வடகுத்து ஊராட்சி மன்ற தலைவரும், பா.ம.க வின் கடலூர் மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் அவர்கள் ஒரு மர்ம கும்பலால் வீச்சரிவாள் போன்ற கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

ஜெகன் அண்ணனைப் பத்தி சொல்லனும்னா, ரொம்ப நல்ல மனுசங்க. அடாவடிக்கு, வீண் வம்பு, தும்புக்கு போனதா நான் கேள்விப்பட்டதே இல்ல. அவரப் போய் இந்த கூலிக்கு கொல பண்ற நாயிங்க தாக்கியிருக்குங்க.
இச்சம்பவத்திற்க்கு அண்ணன் வேல்முருகன் மீது குற்றசாட்டு பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் செய்திதாள்களில் வெளியாகியுள்ளன.
வேல்முருகன் மீது குற்றம் சுமத்தப்படுவதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி, வளர்ச்சியில் பொறாமை. இப்போது நெய்வேலி தொகுதியில் அரசியலில் வளர்ச்சியடைந்து வருபவர்களில் ஜெகன் அண்ணனின் பெயர் முக்கியமானது. இவருக்கு செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இது நிச்சயமாக அண்ணன் வேல்முருகனை பாதிக்கக்கூடிய செய்திதான்.

ஒரு வம்புக்கும் போகதவரையே இப்படி வெட்ட வந்தானுங்கனா..!! நல்லவவங்கெல்லாம் எப்படி அரசியலுக்கு வருவாங்க. அரசியல்னு சொன்னாலே பயமாதான இருக்கும்..!!?
இதைச் செய்ய ஏவியவன் எவனாயிருந்தாலும் நிச்சயமாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
அண்ணன் ஜெகன் அவர்கள் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன்.
நன்றி :Pattali Makkal Katchi (PMK) Internet Wing  [படம்]

5 கருத்துகள்:

  1. தமிழகத்தில் இந்த அடாவடிகள் தான் நடந்துக்கொண்டிருக்கிறது...


    உண்மையாவே பயமாதாங்க இருக்கு..!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி, கருத்திற்க்கு நன்றி..

      நீக்கு
  2. உண்மையாவே பயமாதாங்க இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், வருகையால் மகிழ்ந்தேன். கருத்து உடன்பாட்டினை தெரிவித்தமைக்கு நன்றி.

      நீக்கு