Taekwondo லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Taekwondo லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூன், 2014

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி : தேக்வாண்டோ




NLC  கல்வித் துறை 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவிகளுக்கும் தற்காப்பு கலையை கட்டாயமாக்கி சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறது.

இப்பயிற்சி தொடர்பாக ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரும், தற்காப்புக் கலை பயிற்சியாளருமான திரு.கே.வாசுதேவன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :

புதுடெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்குப் பின் என்எல்சி நிர்வாகம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து அதை சேவையாக செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித் தனி நேரம் ஒதுக்கி மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கிறோம்.

இப்பயிற்சியில் பல மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் என்ன தான் சட்டங்கள் இயற்றி குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் குற்றம் குறைந்தபாடில்லை.

எனவே தற்போதுள்ள சூழலில் தனிமையில் இருக்கும் ஒரு பெண், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியம். எனவே பெண்கள் முதற்கட்டமாக ஆண் பிடியிலிருந்து வெளியேற வேண்டுமானால் தற்காப்புக் கலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்திலிருந்து விடுபட முடியும். அந்த நோக்கில் தான் தற்காப்பு கலை பயிற்சியை வழங்கி வருகிறோம். நெய்வேலி மட்டுமல்ல நெய்வேலியைச் சுற்றியுள்ள பெண்கள் பயிலும் பள்ளிகளிலும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இன்றைய இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி :


மாஸ்டர் திரு.R.இரவிக்குமார் அவர்களுடன் செயல் விளக்கத்தின் போது :
 


இது தொடர்பான பத்திரிக்கை செய்தி : அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

   நன்றி :  
      1.   ‘The Hindu’ (தமிழ் நாளிதழ்)

புதன், 3 ஜூலை, 2013

வண்ண இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

சில நாட்களுக்கு முன்பு கருப்பு இடைவார் தர தேர்வு-தேக்வாண்டோ எனும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் அல்லவா..!!? கிட்ட தட்ட அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு. கடந்த 29-06-2013 அன்று நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு,நெய்வேலி-ன் மாணவர்களுக்கான வண்ண இடைவார் தர தேர்வு(Color Belt Grading) நடந்தது. இத்தேர்வானது ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மாஸ்டர். திரு.R.இரவிக்குமார் ஆகியோர் நேர்நிலையில் தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது. இனி தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்களை காணலாம். 

அதற்கு முன்பாக, தேக்வாண்டோவின் வண்ண இடைவார்களை பற்றி சுருக்கமாக காணலாம்.

        1.        வெள்ளை இடைவார் (White Belt)
        2.        மஞ்சள் பட்டை இடைவார் (Yellow Stripe)
        3.        மஞ்சள் இடைவார் (Yellow Belt)
        4.        பச்சை பட்டை இடைவார் (Green Stripe)
        5.        பச்சை இடைவார் (Green)
        6.        நீல பட்டை இடைவார் (Blue Stripe)
        7.        நீல இடைவார் (Blue Belt)
        8.        சிவப்பு பட்டை இடைவார் (Red Stripe)
        9.        சிவப்பு இடைவார் (Red Belt)

இதற்கு அடுத்தபடியாக கருப்பு இடைவார். கருப்பு இடைவாரினை அவ்வளவு எளிதில் தேக்வாண்டோவில் அடைந்துவிட முடியாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை தேவைப்படும். இக்கருப்பு இடைவாரில் I DAN, II DAN, III DAN, IV DAN, V DAN, VI DAN என ஆறு இடைவார் நிலைகள் உள்ளன. இவற்றைப்பற்றி சந்தர்ப்பம் வாய்த்தால் வேறொரு பதிவில் விரிவாக காணலாம்.

[மாஸ்டர்.திரு.R.இரவிக்குமார்]

        1.        வெள்ளை இடைவார் :
அனைத்து தற்க்காப்பு கலைகளிலும் முதல் நிலையில் இருப்பது இந்த வெள்ளை இடைவார் தான். வெள்ளை காகிதமாக இருக்கும் நாம் கற்க ஆரம்பிக்கும் நிலைதான் இந்த வெள்ளை இடைவார்.

        2.        மஞ்சள் பட்டை இடைவார் :
வெள்ளை இடைவாரிலிருந்து கிடைக்கும் முதல் தர உயர்வு இந்த மஞ்சள் பட்டை. வெள்ளை இடைவாரில் இரு மஞ்சள் நிறை பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். இம்மஞ்சள் பட்டையிலிருந்து நமக்கு அறிய கிடைப்பது, தேக்வாண்டோவின் அடிப்படைகளை இவர் அறிந்துகொண்டுள்ளார் என்பதாகும். விதைக்கப்பட்டுள்ள விதையின் நிலை இம்மஞ்சள் பட்டை இடைவார்.

        3.        மஞ்சள் இடைவார் :
அதிகாலையில் மேலெழும் ஆதவனின் நிறம். இடைவார் முழுமையும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதைக்கப்பட்ட விதையானது முளைவிட்டு வெளிவரும் நிலை மஞ்சள் இடைவார். தேக்வாண்டோவின் அடிப்படைகளிலிருந்து நுனுக்கங்களை அறிந்து மேலெழும் நிலை இந்த மஞ்சள் இடைவார்.

        4.        பச்சை பட்டை இடைவார் :
மஞ்சள் இடைவாரில் முனைகளில் இரு பச்சை நிற பட்டைகள் தைக்கப்பட்டிருக்கும். வளரும் செடிக்கு உரமிட்டு நீர் பாய்ச்சும் நிலை.

        5.        பச்சை இடைவார் :
வளரும் மரத்தின்/செடியின் பசுமையை குறிப்பது. ஒரு வளரும் செடியானது எந்த அளவிற்க்கு பசுமையாக இருக்கிறதோ, அதேபோல் பச்சை இடைவார் நிலையை அடைந்த ஒருவரின் தேக்வாண்டோ கலை நுனுக்கமும், மனமும் பசுமையாகவும் தெளிவாகவும் இருக்கும்.

        6.        நீல பட்டை இடைவார் :
பச்சை இடைவாரின் முனைகளில் இரு நீல நிற பட்டைகள். வானத்தை நோக்கிய வளர்ச்சியின் நிலை இது.

        7.        நீல இடைவார் :
இடைவார் முழுவதும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீல நிறம் வானத்தை குறிக்கும். நன்கு வளர்ச்சி அடைந்த மரமானது வானத்தை நோக்கி நிற்கும் நிலைதான் இந்த நீல இடைவார். அதுபோல தேக்வாண்டோவின் நுனுக்கங்களை நன்கு அறிந்துகொண்டதை குறிக்கும் நிலை இது.

        8.        சிவப்பு பட்டை இடைவார் :
நன்கு கற்றறிந்த நுனுக்கங்களை மெருகேற்றும் நிலை இது. நீல இடைவாரின் முனைகளில் சிவப்பு பட்டை தைத்திருத்தல்.

        9.        சிவப்பு இடைவார் :

இவ்விடைவார் முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது இவ்விடைவாரை அணிந்திருப்பவர் மிகவும் ஆபத்தானவர் என்பதை குறிக்கும். தனது எதிராளியை எச்சரிக்கும் நிறம் இது.

வெள்ளி, 31 மே, 2013

கருப்பு இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ - நெய்வேலி

கருப்பு இடைவார் தர தேர்வு - தேக்வாண்டோ : Black Belt Grading - Taekwondo

கடந்த 21-05-2013 அன்று தேக்வாண்டோவின் கருப்பு இடைவார் தர  நிகழ்வு நெய்வேலி நகர மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இத்தர தேர்வு, ஒலிம்பியன் தோக்வாண்டோ கூட்டமைப்பு, நெய்வேலி-ன் செயலாளர் மாஸ்டர் திரு.K.வாசுதேவன் அவர்களது நேர்நிலையில், தமிழ் நாடு தேக்வாண்டோ அகாடமியின் தலைவர் மாஸ்டர் திரு.K.பாபு Vth Dan Black Belt அவர்களால் நடத்தப்பட்டது.
[திரு.K.வாசுதேவன், திரு.K.பாபு]

இந்நிகழ்ச்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி தர உயர்வு அடைந்த நமது ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்கத்தின் மாணவர்களுடைய புகைப்படம் இதோ.

நெய்வேலி தேக்வாண்டோ மாணவர்களிடம் ஒரு சிறப்பான விடயம் உண்டு. எந்த ஒரு வீரனும் நெய்வேலி வீரர்களிடம் போட்டியிடும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்துவர். ஏனெனில் நெய்வேலி தேக்வாண்டோ மாணவர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நெய்வேலி மாணவர் எவர் ஒருவரையும் சாதாரணமாக எடை போட முடியாது.


        நன்றி : Olympian Taekwondo Association, Neyveli.