திங்கள், 16 ஜூன், 2014

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி : தேக்வாண்டோ




NLC  கல்வித் துறை 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவிகளுக்கும் தற்காப்பு கலையை கட்டாயமாக்கி சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறது.

இப்பயிற்சி தொடர்பாக ஒலிம்பியன் தேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரும், தற்காப்புக் கலை பயிற்சியாளருமான திரு.கே.வாசுதேவன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :

புதுடெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்குப் பின் என்எல்சி நிர்வாகம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து அதை சேவையாக செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித் தனி நேரம் ஒதுக்கி மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கிறோம்.

இப்பயிற்சியில் பல மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் என்ன தான் சட்டங்கள் இயற்றி குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் குற்றம் குறைந்தபாடில்லை.

எனவே தற்போதுள்ள சூழலில் தனிமையில் இருக்கும் ஒரு பெண், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியம். எனவே பெண்கள் முதற்கட்டமாக ஆண் பிடியிலிருந்து வெளியேற வேண்டுமானால் தற்காப்புக் கலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்திலிருந்து விடுபட முடியும். அந்த நோக்கில் தான் தற்காப்பு கலை பயிற்சியை வழங்கி வருகிறோம். நெய்வேலி மட்டுமல்ல நெய்வேலியைச் சுற்றியுள்ள பெண்கள் பயிலும் பள்ளிகளிலும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இன்றைய இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி :


மாஸ்டர் திரு.R.இரவிக்குமார் அவர்களுடன் செயல் விளக்கத்தின் போது :
 


இது தொடர்பான பத்திரிக்கை செய்தி : அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

   நன்றி :  
      1.   ‘The Hindu’ (தமிழ் நாளிதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக