கலைஞர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 செப்டம்பர், 2015

கலாய்க்கப்படும் கருணாநிதியின் மகன்

ஸ்டாலின் இந்த அளவிற்கு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பகடி பேசப்படுவார் என்று தி.மு.க வினர் மட்டுமல்ல யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

நமக்கு நாமே என்ற திட்டத்தை ஏற்படுத்தி மக்களை நேரடியாக சந்திக்கப்போகிறேன் பேர்வழி என கிளம்பி மிகக் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறார்.

ஏன் திடீரென இப்படி ஒரு திட்டம்.!? உண்மையிலேயே மக்கள் மீது அக்கரைகொண்டா.!? ஆம் என்றால் இத்தனை ஆண்டுகளாக எங்கே சென்றார்.!? திடீரென எப்படி இந்த ஞானோதயம்.!? உண்மையில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதல்ல இவர்கள் திட்டம்.

இவர்களின் திட்டமே வேறு.!

இவர்களின் இத்திட்டத்திற்க்கு காரணம், பாட்டாளி மக்கள் கட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுதான்.! ஆமாம், தி.மு.க வின் செயல்பாடுகளை கவனிப்பீர்களேயானால், பா.ம.க வின் கொங்கு மண்டல மாநாட்டிற்க்கு பிறகு தி.மு.க வில் ஒரு பாரிய மாற்றத்தை நீங்கள் காணலாம்.

கொங்கு மண்ணில் பா.ம.க விற்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை கண்டு வெதும்பி பா.ம.க-வை மக்கள் மத்தியில் மறக்கடிக்க செய்ய நடத்தப்பட்டதுதான் “உரிமை மீட்பு பேரணி” எனும் பெயரில் கடலூர் புதுசத்திரத்தில் நடத்தப்பட்ட 18 மாவட்ட மாநாடு. இம்மாநாட்டில் “இது கோவிந்தசாமி படையாட்சியார் பிறந்தமண்”, “இது இராமசாமி படையாட்சியார் பிறந்தமண்” எனப் பேசிய ஸ்டாலினின் வார்த்தைகளிலிருந்து தி.மு.க வின் சாதீய பித்தலாட்டத்தை வெளிப்படையாகவே உணரலாம்.

உண்மையில் தி.மு.க பாட்டாளி மக்களின் வளர்ச்சியை கண்டு உள்ளபடியே பெரிதாக அச்சப்படுகிறது.! மேலும் தி.மு.க காலாவதியான மருந்தாக மாறிவிட்டது. அதனாலேயே பா.ம.கவின் அனைத்து செயல்பாடுகளையும் அப்படியே படியெடுத்து கொஞ்சமாக மாற்றி தி.மு.க-வின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றனர்.

பா.ம.க வின் மது ஒழிப்பு கொள்கையை மக்கள் மத்தியில் நீர்த்துபோக செய்ய தி.மு.க வும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அது ஒருவார காலத்துக்கு ஊடகங்களில் பெருத்த விவாதத்திற்கு ஆட்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு பேசி சிறிது பரபரப்பை ஏற்படுத்திவிட்டு பின் அமைதியானது தி.மு.க. அந்த அமைதிக்கும் காரணமில்லாமலில்லை. தமிழ்நாடு அரசுக்கு மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பாதி தொழிற்சாலைகள் தி.மு.க-வினருடையதுதான். மீதி அ.தி.மு.க-வினருடையது. தி.மு.க-வினருடைய தொழிற்சாலைகள் பற்றி பேச்சு கிளம்பியதும் மது ஒழிப்பு பேச்சை தீவிரமாக பேசாமல் அப்படியே அமையாகிக்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக அன்புமணியை எப்படியேனும் வீழ்த்தியாக வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட திட்டம்தான் நமக்கு நாமே திட்டம். அதுவும் மருத்துவர் அன்புமணியின் பாணியிலேயே.! இத்திட்டத்தின் விளம்பர பதாகைகூட பா.ம.க உருவாக்கிய அமைப்பு முறை மாதிரியே கிட்டதட்ட அதே மாதிரியாக.!

இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனக்கு கிடைக்காத ஒரு வரவேற்பு எப்படி அன்புமணிக்கு கிடைத்தது என்பதன் விளைவாக வந்தது தான் பொதுமக்களை நேரடியாக எதார்த்தமாக சந்திக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் இந்த மாற்றம். ஆனால் இதிலும்கூட இவர்களின் போலித்தனத்தை காட்டியுள்ளனர். மொத்தத்தில் இவர்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை இவர்களே தோலுரித்து காட்டிக்கொள்கின்றனர். “நுணலும் தன் வாயாற் கெடும்” எனும் முதுமொழிக்கு தக்க உதாரணமாக தற்போதைய தி.மு.க-வின் செயல்பாடுகள் அமைகிறது.
மேலும் பா.ம.க-வின் முதல்நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்ற அறிவிப்பு மக்களிடையே பெருத்த வரவேற்ப்பு பெற்றதையடுத்து தாங்களும் ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என அறிவித்திருக்கின்றனர்.

தேர்தல் என்றால்தான் இவர்களுக்கு மக்களும் மக்களுக்கான பிரச்சினைகளும் நினைவுக்கு வரும் போலிருக்கிறது.!

சரி, தலைப்புக்கு வருவோம்...

இந்த மனுசன் நமக்கு நாமே கிளம்புனாலும் கிளம்பினாரு, இணைய சமூக தள பயன்பாட்டாளர்களுக்குதான் செம கொண்டாட்டம்.. இவர் ஊர் சுற்ற ஆரம்பித்த பிறகு வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும் ஏக போட்டியாக உருவெடுத்துவிட்டார்.

இந்த நகைச்சுவை நடிகர்களின் படங்களில் வரும் காட்சி அமைப்போடு ஸ்டாலின் அவர்களின் உடை, உடல்மொழி, சூழல் என ஏறக்குறைய எல்லாமுமே பொருந்திப்போவதுதான் சால ஆச்சரியம்.

சமூக ஊடகங்களான முகநூலிலும், ‘டிவிட்டரிலும்’ சில ஒளிப்படங்களை நீங்களும் காண்டு களியுங்கள்...













திராவிடத்தின் வீழ்ச்சியில்தான் தமிழரின் எழுச்சி அடங்கியிருக்கிறது.! தமிழ் வீறுகொண்டு எழ எழ திராவிடம் வீழும்.! விழித்திடு தமிழா விடியல் காண.!

படங்கள் : ஒளிப்படங்களை உருவாக்கி இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும்படி வெளியிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. 




திங்கள், 3 செப்டம்பர், 2012

நமக்கு சூடு சொரணை இருக்கா..?

உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன்..
உலகின் முதல் முன்னேறிய நாகரிகத்திற்கு சொந்தக்காரன்..
உலகின் சிறந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரன்..
உலகத்திலேயே தன்மானத்தைப்பற்றி நான் அறிய அதிகமாக பேசுபவன்...

என, இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நமக்கு உண்மையிலேயே சூடு சொரணை இருக்கா..?

ஒருவேளை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மட்டும்தான் சூடு சொரணை இருக்குமோ..!!?

அனேகமா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தமிழ்நாட்டில் வாழும் நமக்கு சத்தியமா சூடு சொரணை கிடையாது..!!

கி.பி 2009 ல பக்கத்து நாட்டுல சண்டை நடந்துச்சு... நம்ம நாட்டுல இல்ல... அங்க யாரோ தமிழர்கள்ன்னு ஒரு இனம் இருக்காமே..!!??? அந்த இனத்துல இருக்கறவங்க நெறையா பேர அந்த நாட்டு சிங்கள இன ராணுவம் பச்ச குழந்தைகள்னு கூட பாக்காம சுட்டு கொன்னுச்சாம்.

அதுக்காக அந்த இனத்தை சேர்ந்த வெளிநாட்டுல வாழற மக்கள் பயங்கரமா போராட்டம்லாம் நடத்தினாங்களாம்... அந்த சிங்கள இன தலைவர் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்க இருக்குற அந்த இன மக்கள் அந்த நாட்டோட நல்லரசிடம் அனுமதி பெற்று பயங்கரமா போராட்டம் நடத்தி, நீதிமன்றத்துல வழக்கெல்லாம் போட்டு அந்த ஆள அந்த நாட்டுக்கெல்லாம் வர விடாம பன்னுனாங்களாம்.

அப்படியே, மீறி அந்த நாட்டுக்கு வந்தாலும், போராட்டத்தை வலுபடுத்தி அந்த ஆளு வந்த காரியத்தை நடத்த விடாம தொரத்தி அனுப்பிடுவாங்களாம்.

அந்தமாதிரிதான் ஒருதடவ, அந்த சிங்கள தலைவரு இங்கிலாந்து நாட்டுல இருக்குற இலண்டன் மாநகருக்கு போனாராம். அங்க என்னடானா பயங்கர போராட்டமாம். அவர் போய் இறங்குன விமான நிலையம் முழுக்க ஒரே போராட்டக்காரர்களாம். என்ன பண்றதுனே தெரியலாம் இங்கிலாந்து காவல்துறையினருக்கு, கடைசியா ஒரு வழியா அந்த விமான நிலையத்தோட பின் வாசல் வழியா யாருக்கும் தெரியாம பயங்கர பாதுகாப்போட கூட்டிட்டு போனாங்களாம். இதுவரைக்கும் அந்த நாட்டுல இப்புடி ஒரு சம்பவம் நடந்ததே இல்லையாம். எந்த தலைவரையும் இப்படி பின் வாசல் வழியா கூட்டிட்டு போனதே இல்லையாம்.

அதே சமயம் அவர் வந்த காரியத்தையும் நடத்த விடாம போராட்டக்காரர்கள் தொரத்தி அனுப்பிட்டாங்களாம்.

நம்ம பக்கத்து நாட்டுல சண்ட நடக்கும்போது சுத்தமாவே நம்ம நாட்டு ஊடகங்கள் கண்டுக்கவே இல்லையாம். ஏன்னா..! நம்ம நாட்டுல ஊரடங்கு உத்தரவு மாதிரி ஏதோ ஒரு சட்டம் போட்டு அங்க நடக்குற சண்டைய இங்க காட்ட கூடாது எழுத கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆனா ஏதோ ஒரு தொலைகாட்சி மட்டும் நீதிமன்றத்தோட அனுமதி பெற்று அங்க நடக்குற கொடுமைகளை நம்ம நாட்டுல ஒளிபரப்பு பண்ணினாங்களாம். அதையும் நம்ம நாட்டு காவல்துறை மிரட்டி தடை பண்ணிடாங்கனு கேள்விப்பட்டன்.
அதே மாதிரி அந்த தலைவரு திருப்பி அனுப்பப்பட்டத நம்ம ஊருல ஒரு வார பத்திரிகை " போர்க் குற்றவாளிகள் இராஜ மரியாதையுடன் வந்து செல்ல இலண்டன் என்ன தமிழ்நாடா " னு தலைப்பு போட்டு கிண்டலடிச்சாங்களாம்.

இப்படி எந்த நாட்டுக்கும் ஒழுங்கா போக முடியாத அந்த தலைவரு, ஒரு இடத்துக்கு மட்டும் ராஜ மரியாதையோட போயிட்டு வருவாராம். அது எந்த இடம்னா, உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்திய துணைக் கண்டம். இப்ப கூட அந்த தலைவரு அந்த துணைகண்டத்துல இருக்குற ஒரு நாட்டுல பௌத்த கல்வி மையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட வரப்போறாராம். அத நம்ம நாட்டுல யாரோ ரெண்டு பேரு தனித்தனியா கூட்டத்தை கூட்டி எதிர்க்கப் போறதாவும் போராட்டம் நடத்த போறதாவும் கேள்விப்பட்டன். உள்ளூரு அரசியலுக்கு நான் ஒரு ஆள நம்பிகிட்டு இருக்கன். நெறைய திட்டம்லாம் வச்சிருக்காருபா.. அவரு ஏதாவது சொல்லுவாரானு பாக்கறான், ஏதும் சேதி கெடைக்கல. அப்பறம் அந்த இனத்துக்கு தலைவருன்னு நம்ம நாட்டுல ஒருத்தரு சொல்லிக்கிட்டு இருப்பாராமில்ல. அவரு அந்த சிங்கள தலைவரு வர்றதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிராராமா..,  ஆனா போராட்டம்லாம் நடத்த மாட்டாராம்.

இதுல எனக்கு என்னன்னா, நம்ம நாடும் அந்த துணைக்கண்டத்தை சேர்ந்தது-னு  சொல்றாங்கப்பா... நான் கெடையவே கெடையாதுன்னு சொல்லிட்டன். அட அத கூட ஏத்துக்கலாம்பா.. நாமளும் அந்த இனம் தான் அப்டின்னு சொல்றாங்க..
நான் செம கடுப்பாயிட்டான். நீங்களே சொல்லுங்க இத நான் எப்புடி ஒத்துக்கறது. அவங்களாம் போராட்டம் பண்றாங்க, அந்த தலைவர எதிர்க்கறாங்க. அவங்களுக்கு சொந்தமில்லாத நாட்டுக்குள்ளேயே நுழையவிடாம தடுக்கறாங்க.

நாமளும் அவங்களும் ஒரே இனமா இருந்திருந்தா, அந்த தலைவரு இலண்டன் போறதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம பக்கத்துல இருக்குற ஆந்திரா நாட்டோட திருப்பதி கோவிலுக்கு வந்துட்டு போனமாதிரிலாம் கேள்விப்பட்டன்.
அதுவுமில்லாம அந்த சிங்கள நாட்டு ராணுவத்துக்கு நம்ம நாட்டுல வச்சி பயிற்ச்சிலாம் குடுத்தாங்களாம். இதெல்லாம் நடந்திருக்குமா..!!?

அதனால நான் என்ன சொல்றேன்னா, நாமளும் அவங்களும் ஒரே இனம் கிடையாது. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு சூடு, சொரணை, மானம், ஈனம், தன்மானம் அப்டின்னு நெறையவே இருக்கு நமெக்கெல்லாம் அது கெடையாது.
நாமளும் அவங்க இனம்னா நமக்கும் சூடு சொரணை இருக்கனுமில்ல..!!?

சரி நான் சொல்றத விடுங்க, நீங்களே சொல்லுங்க... நமக்கு சூடு சொரணை இருக்கா...!!!?????