என்ன கொடும சரவணன் இதெல்லாம்...
பால் தாக்கரே செத்துபோய்ட்டாரு..
சரி இப்ப அதுக்கென்ன..!?
அவர் செத்ததுக்கு ஒண்ணுமில்ல..
பால் தாக்கரே செத்துபோய்ட்டாரு..
சரி இப்ப அதுக்கென்ன..!?
அவர் செத்ததுக்கு ஒண்ணுமில்ல..
அவர் செத்ததுக்காக ஏன்டா இப்படி பந்த் பண்றீங்கன்னு ஒரு பொண்ணு தெரியாம முகநூல்ல சொல்லிட்டா..
நம்ம மகாராஷ்டிரா காவல்துறை என்ன பன்னுச்சுனா நாங்க தமிழ்நாட்டு காவல்துறையை விட பெரிய ஆளுன்னு காமிக்கறதுக்காக, யாரோ புகார் கொடுத்தாங்கன்னு அந்த பொண்ண கைது பண்ணிட்டாங்க.
இதுல ஒரு பெரிய நகைச்சுவை இருக்கு. அது என்னன்னா, அந்த பொண்ணோட கருத்துக்கு விருப்பம் தெரிவித்த காரணத்திற்க்காக மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.
வர வர என்ன சொல்லணும் என்ன சொல்ல கூடாதுனே தெரியல..
எனக்கு வேற ஈவு சாவு தெரியாது... நான் மாட்டும் ஏடா கூடமா எதாவது சொல்லி என்னைக்கு வாங்கி கட்டிக்கப்போறேனு தெரியல.
ஏற்கனவே,
சின்மயி வழக்கு
கார்த்திக் சிதம்பரம் வழக்கு-னு
படு பயங்கரமா பிரச்சனைகள் போய்கிட்டு இருக்கு. இதுல புதுசா இது வேற...
என்னமோ கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்-னு ஒன்னு சொன்னாங்க, அதெல்லாம் எனக்கு கனவு மாதிரியே இருக்கு.
***************
[வண்டு முருகன் பாணியில் படிக்கவும்]
நான் மேற்சொன்ன வழக்குகளிலிருந்து நான் தற்சமயம் இருக்கும் வலைப்பதிவர்கள் உலகில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவதால்,
நான் மேற்சொன்ன கருத்துகளுக்காக இங்கேயே இப்போதே இந்த பதிவிலேயே மன்னிப்பு கேட்டு நமது காவல்துறையால் பாதுகாப்பான உலகம் என அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு உலகத்தில் இணைகிறேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்காக என்னை பயந்தாங்கோலி என்றோ பச்சோந்தி என்றோ யாரும் எண்ணி விட வேண்டாம்.
இருக்குற இடத்திலிருந்தே, எழுதிய பதிவிலேயே மன்னிப்பு கேட்கும் துணிவும் தைரியமும் இந்த இணைய உலகத்திலேயே என் ஒருவனுக்கு மட்டும்தான் இருக்கிறது என சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.