பெண் சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2012

எனக்கு அடிமையாய் வேண்டும் பெண்கள்..!?



எனக்கு ஒரு விசயம் சுத்தமாவே புரியலங்க..

பெண்களுக்கு சுதந்திரம் இருக்கா..!!? இல்லையா..!!?

இல்லைனா..! அத பத்தி பொறுமையா நேரம் கெடச்சா பாக்கலாம்.

இருக்குனா..!! அவங்களுக்கு என்ன மாதிரியான சுதந்திரம் இருக்கு..!!?

எனக்கு அடிப்படையிலேயே சில சந்தேகங்கள் இருக்கு, அத இங்க சொல்றன் உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க...

பெண்கள் பண்பாட்டு பொம்மைகளாக பார்க்கப்படுவது ஏன்..!!? பண்பாட்டு பொம்மையாக அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படவில்லையா..!!?

உதாரணத்திற்கு, ஆண்கள்  T-Shirt , Jeans  அணிந்தால் பண்பாட்டு சீரழிவாக பார்க்காத நாம் பெண்கள் அணியும் போது ஏன் பண்பாட்டு சீரழிவாக பார்க்கிறோம்...!!?

ஆண்கள் மது, புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது சாதாரணமான தவறுகளில் ஒன்றாக தெரிபவை, பெண்கள் பயன்படுத்தும்போது மட்டும் ஏன் மாபெரும் குற்றங்களாக தெரிகின்றன...!!?


ஆடைகள் முதற்கொண்டு பெரும்பான்மையானவற்றில் ஆண்களுக்கு சௌகரியமானதாகவும் பெண்களுக்கு அசௌகரியமானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளமை ஏன்..!!?

இன்று ஓரளவிற்கு முன்னேறியுள்ள போதும், ஏன் பெண் எப்போதும் ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது..!!?

பொதுவாக வீட்டிலும் வெளியிலும் ஆணின் வார்த்தைக்கு இருக்கும் மதிப்பு பெண்ணுக்கு இருப்பதில்லையே ஏன்..!!?

ஏன் எப்போதும் ஒரு பெண் தன் கணவனுக்கு அடங்கியே இருக்க வேண்டும்.!!?

ஏன் சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்..!!?

ஒரு ஆணுக்கு முன்னாள், கை நீட்டி பேசவோ, நாற்காலியில் அமரவோ(அ)கால்மேல் கால் போட்டு அமரவோ கூடாது என்பது பெண்களாலேயே சொல்லப்படுவது ஏன்..!!?

ஒரு ஆண் காதலிப்பதை பெரிய தவறாக பார்க்காத சமூகம் பெண் காதலிப்பதை மட்டும் தவறாக பார்ப்பது ஏன்..!!?

ஒவ்வொரு மதத்திலும் பெண்களுக்கு எதிராக இத்தனை கட்டுப்பாடுகள் எதற்க்காக இருக்கின்றன ..!!?

என் சில புரிதல்கள் :
இந்த பெண் அடிமைத்தனமும் சாதியும் கிட்ட தட்ட ஒன்றுதான். ஆண்கள் ஆதிக்க சாதியாகவும் பெண்கள் அடிமட்ட சாதியாகவும் இருக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் நான் இப்போது சொல்லப்போவது ஓரளவிற்கு சரியான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்..

" ஒருவனுக்கு மனைவியாக வரப்போகும் (அ) இருக்கும் பெண் தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருப்பாளேயானால், அவளுடைய உற்றார் உறவினர் மத்தியிலும் அவன் உற்றார் உறவினர் மத்தியிலும் தான் ஆளுமை மிகுந்தவனாக பார்க்கப்படுவேன் என்ற எண்ணமும் தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்ற எண்ணமுமேயாகும்.

அதே சமயம் அவனுடைய இந்த செயலால் மற்ற ஆண்களையும் இவ்வாறு இருக்க மறைமுகமாக தூண்டுகிறான்.

இதன் காரணமாகவே தனக்கான ஒரு அடிமையை அடிமை என்று சொல்லாமல் உறவை வைத்து அடிமையாய் கொண்டிருக்கிறான். இதனிடையே பெண்மை கேள்வி கேட்டுவிடாமல் இருக்க பாசத்தைப் பொழிந்து பெண்கள் அடிமையாய் இருப்பதுதான் பெண்கள் பிறப்பிற்க்கே அழகு என்ற போதனையையும் அதன் அடி மனது வரை இறக்கிவிட்டிருக்கிறான்.

இன்னும் என்னென்னவோ தோணுது, சொல்லத்தான் முடியல..!!

எல்லாம் சரி இது என்னடா தலைப்பு-னு கேக்கரீங்களா..!! நான் வேற மாதிரி எழுதலாம்னு நினச்சேன். ஆனால், எழுத நெனைக்கும்போது எல்லாம் கேள்வியா வந்துச்சா.. அதனால அப்டியே விட்டுட்டன்.

குறிப்பு : நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க..!! :-)

நன்றி : கூகிள்-படம்