வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மருத்துவம் வியாபாரம்தான் ஆனால் மருத்துவர்கள் வியாபாரிகள் அல்ல.!

இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் வியாபாரம்தான். ஆனால், மருத்துவர்கள் வியாபாரிகள் அல்ல. சிலர் மட்டும் விதிவிலக்குகளாக.

ஒரு ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு PRINTER வாங்கி அதுல ஒரு BLACK & WHITE PRINT OUT 5 ரூபாய்னு சொல்லுவான். கேட்டா, LASER PRINT-னு சொல்லுவான், QUALITY INK-னு சொல்லுவான். இங்கெல்லாம் நாம பெருசா எதுவும் பேசுறதில்ல.

ஆனால் அதே மாதிரி, இலட்சத்துலயும் கோடியிலயும் பணம் போட்டு வாங்கப்பட்ட மருத்துவ இயந்திரத்தை பயன்படுத்தும் போது குறைந்த அளவு காசுதான் வசூலிக்கனும்னு நாம எதிர்பார்க்கிறோம். இது ஏன்.?

மருத்துவம் சேவைனு சொல்லிட்டு ஏன் இப்படினு கேட்ப்பீங்க.! இப்போதும் மருத்துவம் சேவைதான். எப்படியெனில், ஒரு மூல வியாதிக்காரனுக்கு அறுவை சிகிச்சையை அறுவருப்பு இல்லாம உங்களால் செய்ய முடியுமா..!? இலட்ச ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டீங்க. ஆனால், இந்த மருத்துவர்கள் செய்வாங்க ஏன்னா இது அவங்களோட கடமை. அதனாலதான் இது சேவை.

தலையில் மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைப் பற்றி நம்முடைய பார்வை சாதாரணமானது. ஆனால் ஒரு மருத்துவருக்கு அது சாதாரணமானது அல்ல. உயிர் சம்பந்தப்பட்டது. உயிருக்கு துயர் இல்லாமல் சிகிச்சையை முடிக்கிறாங்க பாத்தீங்களா.! அதனாலதான் சேவை.

உண்மையில் நம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டியது மருத்துவர்களை நோக்கி அல்ல. அரசாங்கத்தை நோக்கி. மருத்துவர் அன்புமணி அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு மருத்துவ துறைக்கு நவீன தொழில் நுட்பங்களை கொண்டுவர 100 கோடி ரூபாயை ஒதுக்கினாராம். ஆனால், அத்தகைய தொழில்நுட்பங்கள் இப்போதைக்கு சரிவராது என அதனை திருப்பி அனுப்பிவிட்டார் அந்நாளைய முதல்வர் கருணாநிதி. இதை ஒரு நேர்காணலின்போது மருத்துவர் அண்புமணி தெரிவித்திருந்தார்.

இதுபோன்றவைகளை குறித்துதான் கேள்வி எழுப்ப வேண்டும் கோபிநாத். செய்வாரா..!? செய்ய முடியுமா..!?

உடல் நல குறைவு காரணமாக மருத்துவரை சந்திக்கும்போது, நமது உபாதைகளை கேட்டறிந்து, இதயத்துடிப்பு, கண், நாக்கு போன்ற வெளிப்படையான கூறுகளை கண்டுணர்ந்து இது இந்த பிரச்சனையாகத்தான் இருக்கும் என்கிற அனுமானத்தின் அடிப்படையில் அதற்க்குறிய அடிப்படை மருந்துகளை எழுதி கொடுப்பார். இரண்டு நாட்களுக்கு இதை சாப்பிடுங்க சரியாகலனா மறுபடியும் வாங்கனு சொல்லுவார். சரியாகிவிட்டால் பிரச்சனை முடிந்தது இல்லையென்றால் அடுத்த கட்ட சோதனைகள்.

கோபிநாத் சொல்வது மாதிரி ஒரே பார்வையில் இது இந்த வியாதிதான் என மருந்து கொடுத்துவிட முடியாது. ஏனெனில் பல வியாதிகளுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும். பிறகு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த மருத்துவர்களைதான் நாம் குற்றம் சுமத்திக்கொண்டிருப்போம்.

நாம எல்லோரையும் குறை சொல்லவில்லையே சிலரைத்தானே சொல்கிறோம் என சொல்வீர்கள். உண்மையில் இது ஒட்டு மொத்த மருத்துவர்களின் மீதான பார்வையாகத்தான் அமையுமே தவிர குறிப்பிட்ட சிலர் மீதாக அமையாது. ஏன்? என்றால், யார் அந்த சிலர் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதற்க்கும் ஒரு பொதுப்படையான காரணம் தான் பதிலாக இருக்கும். ஆகவே அனைத்து மருத்துவர்களும் இதற்க்கு எதிராக பேசுவது சரியே.!

சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம், நண்பர் ஒருவர் தன்னுடைய மனைவியின் பிரசவத்திற்க்காக பாண்டிச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றிருந்தார். குழந்தை பிறக்கும் வரை அவர் மருத்துவமனையிலேயே ஒரு ஐந்து நாட்களுக்கு இருந்தார். அந்த ஐந்து நாட்களில் ஆறுக்கும் மேற்ப்பட்ட மரணங்கள் நிகழ்ந்ததாக கூறினார். அவற்றில் இரண்டினை மட்டும் இங்கே சொல்கிறேன்.

1. முதல் பெண்ணிற்க்கு குழந்தை பிறக்கும் தருணம் சுகப்பிரசவத்திற்க்கான முயற்சிகள். குழந்தை பிறந்துவிட்டது. தாய் இறந்துவிட்டார். தாய்க்கு புற்றுநோய். அந்த பெண்ணிற்கு புற்றுநோய் இருந்தது பற்றி யார் ஒருவரும் மருத்துவர்களிடம் வாய் திறந்திருக்கவில்லை.
உடற்கூறு ஆய்வு செய்யலாம் என மருத்துவர்கள் தொடங்கும்போது. உடற்கூறு ஆய்வு வேண்டாம் அவருக்கு ஏற்கனவே புற்றுநோய் இருந்தது என கூறி மருத்துவர்களின் கடுமையான ஆட்சேபனைகளுக்கு இடையே உடலை பெற்று சென்றிருக்கின்றனர்.
இங்கே தவறு யாருடையது.!?

2. இரண்டாவது பெண்ணிற்க்கும் அதேபோல்தான். இது சிசேரியன் என நினைக்கிறேன். குழந்தை பிறந்த பின் தாயை ICU வார்டிற்க்கு மாற்றினர் மருத்துவர்கள். அடுத்த சில நிமிடங்களில் அந்த தாய் துடிதுடித்து இறந்துபோனார். மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்துபோயினர். எதனால் இப்படி ஆனது என குழம்பிபோயிருக்கின்றனர்.
பெண் இறந்தது தெரிந்து பெண் வீட்டார் ஒரே கூச்சல், மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்து கொன்றுவிட்டனர் என ஆர்ப்பாட்டம்.
மருத்துவர்கள் காட்டமாக அந்த பெண்ணின் உறவினர்களிடம் கேட்டது,"உண்மையை சொல்லுங்கள் அந்த பெண்ணிற்க்கு வேறு ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது. அது என்ன?" என வினவியிருக்கின்றனர்.
உடற்கூறு ஆய்வுக்கு முற்படும்போது தடுத்து அவருக்கு "வீசிங்"-னு சொல்றாங்களே அந்த சுவாச கோளாறு இருந்ததை தெரிவித்திருக்கின்றர் உறவினர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒருவேளை தனியார் மருத்துவமனைகளில் நடந்திருந்தால்..!!?

அந்த நீயா நானா நிகச்சியிலேயே ஒரு மருத்துவர் தெரிவித்திருந்தார், நாளைக்கே ஏதேனும் பிரச்சனையென்றால் நீதிபதி கேட்கிறார் இந்த வியாதிக்கு இந்தந்த சோதனைகள் செய்ய வேண்டுமே செய்தீர்களா என்று..! அனைத்து சோதனைகளையும் செய்ய சொல்வதற்க்கு இதுவும் ஒரு காரணம் என சொல்கிறார். ஆனால் கோபிநாத் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இன்றைய கால சூழ்நிலைகளில் மருத்துவர்கள் தங்கள் பக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மத்தளத்திற்க்கு இரண்டு பக்கம்தான் அடி ஆனால் இவர்களுக்கு எல்லாபக்கமும் இடி. எல்லோரும் அதிகமா பணம் கேக்குறாங்கனா அதுக்கு காரணம் யாரு..!? மருத்துவர்களா..!? இது எப்படி தெரியுங்களா இருக்கு அரசு பள்ளிக்கூடங்கள் ஆயிரம் இருக்க, தனிப்படிப்பு ஆசிரியர் அதிகம் பணம் வசூலிக்கிறார் என சொல்வதைப் போல இருக்கிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு சுகாதார மையம் இருக்கிறது. அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை எத்தனை..!? மருத்துவத்திலேயும் சொகுசு வேணும்னு சொல்றவங்க பணம் அதிகம் கொடுக்கதான் வேணும்.

இதே முகநூலில் ஒரு அண்ணன் சொன்னாரு, வேறு ஒரு இடத்தில் எடுத்துவந்த சோதனை முடிவுகளை ஏற்கமாட்டேனென்று தான் சொல்லும் இடத்தில்தான் எடுக்க வேண்டும் என கண்டித்த மருத்துவரை திட்டிவிட்டு வந்ததாக ஒரு மருத்துவரை குறிப்பிட்டு கூறினார். நிச்சயம் ஆங்காங்கே இம்மாதியான நோயாளி மருத்துவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை மட்டும் கணக்கிட்டால் நல்ல பல மருத்துவர்களை யார் கணக்கிடுவது..!?

ஆனால், இன்னார் என்று குறிப்பிடாமல் ஒரு சிலர் என்று குறிப்பிடுவது மொத்தமான பார்வையாகவே படும்.

                                                                                                        -X-

இத்தனைக்கும் நான் பெரிதாக எந்த மருத்துவமனைக்கும் சென்றதில்லை. எல்லாமே சிறுவயதில்தான். மிதி வண்டி சக்கரத்தில் காலை விட்டு கொண்டது. எங்க ஊரு பள்ளிகூட போர் குட்டையில் குளிக்கும்போது டயர் வண்டியில் இடித்து மண்டையை உடைத்துகொண்டு 4 தையல் போட்டது.

அப்புறம் நாலாவது படிக்கும்போது சின்னதா ஒரு Major Operation.   அதுக்கு அப்புறம் கோவையில் படிக்கும்போது ஒரு நாலு நாள் நல்ல காய்ச்சல். சரியாகிடும்னு பாத்தேன் ஒன்னும் ஆகல. சரினு பக்கத்துல ஒரு மருத்துவர் இருந்தாங்க அவங்ககிட்ட காமிச்சேன். ஊசி போட்டு மருந்துலாம் எழுதிகொடுத்துட்டு, நல்லா சாப்புடுறானு திட்டினாங்க.. மருந்து சீட்டுல Horlicks லாம் எழுதிகொடுத்தாங்கனா பாத்துக்கோங்களேன்..! அவ்ளோதான் நம்ம மருத்துவ தொடர்பு.


இப்பகூட ஒரு நாலு மாசமா மட்டைப் பந்து விளையாடும்போது விழுந்து முட்டியில அடிபட்டு கொஞ்சம் தாங்கிதாங்கி நடக்குறேன். மருத்துவமனைக்கெல்லாம் போகல.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக