திங்கள், 29 ஏப்ரல், 2013

என்னுடைய கிராமம் - கீழுர் - பெயர் காரணம்.


நான் முதன்முதலில் எழுதிய ஒரு கட்டுரை. எனது ஊர் (My Village) என தலைப்பு கொடுத்து எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போதைய கீழுர் கிராமத்திற்க்கு பாளையக்காரர்களின் வரவையும், கீழுர் கிராம உருவாக்கத்தையும் ஏற்க்கனவே எனது ஊர் : கீழூர் - சிங்கநகர் (செவி வழிச் செய்தி) எனும் பதிவில் எழுதியிருந்தேன். மேலும் கீழுருக்கான பெயர் காரணம் தெரியாது எனவும் தெரிவித்திருந்தேன். இப்போது கீழூருக்கான பெயர் காரணம் அறிந்துகொண்டேன். அதை உங்களுடன் பகிர்கிறேன்.



கீழுர் பாளையக்காரர்களின் வருகைக்கு முன்னர் ஆயிபேட்டை, கீழுர், நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, விழப்பள்ளம், எல்லப்பன்பேட்டை, கோயில்குப்பம், பாச்சாரபாளையம் முதலான கீழுர் பாளையக்காரர்களுக்கு சொந்தமான எட்டு கிராம பகுதிகளும் வடகுத்து ஜமீனுக்கு சொந்தமானவைகளாக இருந்தன.

இப்பகுதிகளில் யாதொன்றை செய்வதற்க்கும் வடகுத்து ஜமீனின் அனுமதி பெற வேண்டும். மேற்சொன்ன எட்டு கிராமங்களும் சூழ்ச்சியால் கீழுர் பாளையக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஆனால், வழக்கமாக அனுமதி பெற வடகுத்து ஜமீனை மக்கள் அனுகும்போது “கீழையூராரிடம்” அனுமதி பெற வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

அதாவது வடகுத்து கிராமத்திற்க்கு கிழக்கு திசையில் இருக்கும் ஊரில் உள்ள பாளையக்காரரிடம் அனுமதி வாங்கிகொள்ளுங்கள். அப்பகுதிகளை ஆளும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்திருக்கிறார்.

இப்படியாக வடகுத்துக்கு கிழக்கில் இருக்கும் ஊர் கீழையூர் என்பது மருவி கீழூர் என மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக