வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஔவை ஆத்திச்சூடி - யாரேனும் விளக்கம் தர இயலுமா..?

ஆத்திச்சூடி, நான் நாலாவது படிக்கும்போது படிச்சது. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்க மாமா பசங்க தமிழ் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதுல நவீன ஆத்திச்சூடிதான் இருந்துச்சு. எனக்கு நாம படிச்ச ஔவையார் எழுதிய ஆத்திச்சூடிதான் ஞாபகம் வந்துச்சு. மனசுகுள்ளையே சொல்லி பாத்தேன். ஔ வரைக்கும் சொல்லிட்டன். ஃ-க்கு என்ன வரும்னு தெரியல. எவ்வளவோ யோசிச்சு பாத்தேன். கடைசி வரைகும் ஞாபகம் வரல. அப்புறமா தேடிபுடிச்சு தெரிஞ்சிகிட்டேன்.

ஆனால், இப்ப ஒரு சிக்கல். எல்லா வரிகளுக்கும் எனக்கு விளக்கம் தெரியல. 1000 வருடங்கலுக்கு முன் எழுதப்பட்டாலும் இப்போதும் படித்தவுடன் புரிந்துகொள்ள எளிமையானதும் தெளிவானதுமான மொழி தமிழ் என அயல்நாட்டினர் புகழாரம் சூட்டுகின்றனர். ஆனால் தற்க்கால தலைமுறை தமிழனான எனக்கு மிக எளிமையான பாடலான ஆத்திச்சூடிக்குகூட சரியான விளக்கம் தெரியவில்லை.

நான் மட்டும் அல்ல, என்னைப் போல் மேலும் என்னை விட மோசமாக பல பேர் இருக்கின்றார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விடயம்.

சரி, நாம நம்ம கதைக்கு வருவோம்.. இங்க எனக்கு தெரிஞ்ச மாதிரியான விளக்கத்தை இங்க எழுதறன். விளக்கம் தெரியாத வரிகளுக்கு சிவப்பு மை இடுகிறேன். நான் சொல்லியிருக்குற விளக்கம் சரினா ஒன்னும் சொல்ல வேணாம். தப்புனா தப்ப சொல்லி விளக்கம் கொடுங்க. எனக்கு விளக்கம் தெரியாத வரிகளுக்கும் விளக்கம் கொடுங்க.

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்ப்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
                                             - ஔவையார்

அறம் செய்ய விரும்பு - நல்லவற்றை செய்ய ஆசைகொள்
ஆறுவது சினம் - குறைத்துக்கொள்ள வேண்டியது கோபம்
இயல்வது கரவேல் -
ஈவது விலக்கேல் - கொடைத்தன்மையை விட்டுவிடக்கூடாது
உடையது விளம்பேல் -
ஊக்கமது கைவிடேல் -
எண் எழுத்து இகழேல் - 
ஏற்ப்பது இகழ்ச்சி - பிச்சை பெருவது இழி செயல்
ஐயம் இட்டு உண் - 
ஒப்புரவு ஒழுகு - நற்பண்புடன் நடந்துகொள்
ஓதுவது ஒழியேல் - படிப்பதை நிறுத்திவிடக்கூடாது
ஔவியம் பேசேல் - 
அஃகம் சுருக்கேல் -

நான் இங்க சொல்லியிருக்குற விளக்கம் அனைத்தும் சரியா  என தெரியவில்லை. செய்யுளில் எழுத்துப்பிழை ஏதேனும் செய்திருந்தால் தமிழ்ப்பெரியோர் பொருத்தருளி என் தவறுகளை சுட்டிகாட்டவும்.

நன்றி : கூகிள்[படம்]

19 கருத்துகள்:


  1. இயல்வது கரவேல் - தம்மால் முடியும் என்பதை மட்டும் செய்யவேண்டும்.

    உடையது விளம்பேல் - தான் செல்வ செழிப்புடன் இருப்பதை அல்லது அழகாக இருப்பதை அதிகாரத்தில் இருப்பதை தேவையில்லாமல் வெளிக்காட்டாதே அது மற்றவர்களை உணக்கு எதிராக தீமைகளை செய்ய தூண்டும்.

    ஊக்கமது கைவிடேல் - ஊக்கம் தான் வெற்றிக்கு வழிகாட்டி அதனால் சுய ஊக்கத்தையும் மற்றவர்களை ஊக்குவித்தலையும் கடைபிடிக்கவேண்டும்.

    எண் எழுத்து இகழேல் - எண்னும் எழுத்தும் உனது இரு கண்களை போன்றது அதனால் அலட்சியமாக கற்க்காமல் இருந்துவிடாதே.

    ஐயம் இட்டு உண் - தன்னை சார்ந்துள்ள வாய் பேசவியலாத மாடு ஆடு கோழி போன்ற உயிரினங்களுக்கு முதலில் உணவு அளிக்கவேண்டும் பிறகு தான் உண்ணவேண்டும் இல்லையேல் அவைகள் பட்டினியாக கிடக்கும் உண் பசி தீர்ந்ததும் மற்றவைகளை மறந்துவிடுவாய்.

    ஔவியம் பேசேல் - தெறியாதவற்றை தெறிந்ததுபோல் பேசாதே அடுத்தவர்கள்மேல் பொய் புரட்டு சுமத்தாதே.

    அஃகம் சுருக்கேல் - அனைவருக்கும் அவ்வப்போது கிடைக்கவேண்டியவைகளை தன் எதிர்காலத்திற்காக வேண்டி மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் பதுக்கிவைக்காதே சுருட்டிகொல்லாதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் விளக்கத்திற்க்கும் நன்றி.

      வந்ததற்க்கான தடங்கள் பல இருந்தும் பதிலலித்தார் யாருமில்லை. விளக்கமளித்து எமக்கு உதவிய உமக்கு நன்றிகள் பல..

      நீக்கு
    2. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:31

      எடு கா "உடையதுவிளம்்பேல்்" நமது பலத்்தையோ பலவீனத்்தையோ அடுத்்தவரிடம்் கூறாதே! பலத்்தைக்்கூறினால்் தற்்பெருமையாகும்்பலவீனத்்தைக்்கூறினால்் அவமானப்்படநேரிடும்்

      நீக்கு
    3. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:33

      எடு கா "உடையதுவிளம்்பேல்்" நமது பலத்்தையோ பலவீனத்்தையோ அடுத்்தவரிடம்் கூறாதே! பலத்்தைக்்கூறினால்் தற்்பெருமையாகும்்பலவீனத்்தைக்்கூறினால்் அவமானப்்படநேரிடும்்

      நீக்கு
  2. அன்புத் தொல்லையின் பொருளறியாக் கேள்விகளும்
    புரட்சி தமிழனின் அறிவார்ந்த பதில்களும் அருமை.

    படிப்பவர் அனைவருக்கும் பயன் படும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு கருத்துக்கும் நன்றி..

      நீக்கு
    2. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:20

      ஆத்்திச்்சூடிக்்கு எனக்்குத்்தெரிந்்தவரை விரிவான பொருள்் எனதுமுகநூல்்பக்்கத்்தில்் எழுதிவருகிறேன்் படித்்துப்்பாத்்து கருத்்துக்்களை பதியுங்்கள்் மதிவாணன்்

      நீக்கு
    3. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:23

      ஆத்்திச்்சூடிக்்கு பொருள்் எழுதிவருகிறேன்்எனதுமுகநூல்் பக்்கத்்தில்் படித்்துக்்கருத்்துக்்களைபதியுங்்கள்்

      நீக்கு
    4. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:23

      ஆத்்திச்்சூடிக்்கு பொருள்் எழுதிவருகிறேன்்எனதுமுகநூல்் பக்்கத்்தில்் படித்்துக்்கருத்்துக்்களைபதியுங்்கள்்

      நீக்கு
    5. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:25

      ஆத்்திச்்சூடிக்்கு எனக்்குத்்தெரிந்்தவரை விரிவான பொருள்் எனதுமுகநூல்்பக்்கத்்தில்் எழுதிவருகிறேன்் படித்்துப்்பாத்்து கருத்்துக்்களை பதியுங்்கள்் மதிவாணன்்

      நீக்கு
  3. ஆத்திசூடி

    1.அறம் செய விரும்பு
    • நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

    2. ஆறுவது சினம்
    • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

    3. இயல்வது கரவேல்
    • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

    4. ஈவது விலக்கேல்
    • ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

    5.உடையது விளம்பேல்
    • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

    6. ஊக்கமது கைவிடேல்
    • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

    7. எண் எழுத்து இகழேல்
    • எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

    8. ஏற்பது இகழ்ச்சி
    • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

    9. ஐயம் இட்டு உண்
    • யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

    10. ஒப்புரவு ஒழுகு
    • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

    11. ஓதுவது ஒழியேல்
    • நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

    12. ஔவியம் பேசேல்
    • ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

    13.அஃகஞ் சுருக்கேல்
    • அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

    14.கண்டொன்று சொல்லேல்.
    • கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

    15.ஙப் போல் வளை.
    • 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
    அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

    • "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

    16.சனி நீராடு.
    • சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

    17.ஞயம்பட உரை.
    • கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

    18.இடம்பட வீடு எடேல்.
    • உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

    19.இணக்கம் அறிந்து இணங்கு.
    • ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

    20.தந்தை தாய்ப் பேண்.
    • உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 21 இல் இருந்து 40 வரை உள்ளவை எங்கே அய்யா. தயவு செய்து பதிவு செய்யவும். தங்கள் சேவை பாராட்டுக்கு உரியது.

      நீக்கு
  4. ஆத்திசூடி

    41. கொள்ளை விரும்பேல்
    • பிறர் பொருளை திருடுவதற்க்கு ஆசைப்படாதே.

    42. கோதாட் டொழி
    • குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

    43.கௌவை அகற்று
    • வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

    44. சக்கர நெறி நில்
    • அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

    45.சான்றோ ரினத்திரு
    • அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

    46. சித்திரம் பேசேல்
    • பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

    47. சீர்மை மறவேல்
    • புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

    48. சுளிக்கச் சொல்லேல்
    • கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர்

    49. சூது விரும்பேல்
    • ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

    50. செய்வன திருந்தச் செய்
    • செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

    51.சேரிடமறிந்து சேர்
    • நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

    52. சையெனத் திரியேல்
    • பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

    53. சொற்சோர்வு படேல்
    • பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

    54. சோம்பித் திரியேல்
    • முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

    55. தக்கோ னெனத்திரி
    • பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

    56. தானமது விரும்பு
    • யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

    57. திருமாலுக்கு அடிமை செய்
    • நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

    58. தீவினை யகற்று
    • பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

    59.துன்பத்திற் கிடங்கொடேல்
    • முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

    60. தூக்கி வினைசெய்
    • ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராய்யந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத் தொடங்கவும்

    பதிலளிநீக்கு
  5. ஆத்திசூடி

    61. தெய்வ மிகழேல்
    • கடவுளை பழிக்காதே.

    62. தேசத்தோ டொத்துவாழ்
    • உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

    63. தையல்சொல் கேளேல்
    • மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

    64. தொன்மை மறவேல்
    • பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

    65. தோற்பன தொடரேல்
    • ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

    66. நன்மை கடைப்பிடி
    • நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

    67. நாடொப் பனசெய்
    • நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

    68. நிலையிற் பிரியேல்
    • உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

    69. நீர்விளை யாடேல்
    • வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே

    70. நுண்மை நுகரேல்
    • நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

    71. நூல்பல கல்
    • அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

    72.நெற்பயிர் விளை
    • நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

    73. நேர்பட வொழுகு
    • ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

    74. நைவினை நணுகேல்
    • பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

    75. நொய்ய வுரையேல்
    • பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

    76. நோய்க்கிடங் கொடேல்
    • மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

    77. பழிப்பன பகரேல்
    • பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

    78. பாம்பொடு பழகேல்
    • பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

    79. பிழைபடச் சொல்லேல்
    • குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

    80. பீடு பெறநில்
    • பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

    பதிலளிநீக்கு
  6. ஆத்திசூடி

    81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
    • உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்

    82. பூமி திருத்தியுண்
    • விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்

    83. பெரியாரைத் துணைக்கொள்
    • அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

    84. பேதைமை யகற்று
    • அறியாமையை போக்கு

    85. பையலோ டிணங்கேல்
    • அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

    86. பொருடனைப் போற்றிவாழ்
    • பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

    87. போர்த்தொழில் புரியேல்
    • யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே

    88. மனந்தடு மாறேல்
    • எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

    89. மாற்றானுக் கிடங்கொடேல்
    • பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

    90. மிகைபடச் சொல்லேல்
    • சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

    91. மீதூண் விரும்பேல்
    • மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

    92. முனைமுகத்து நில்லேல்
    • எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக முந்தி நிற்காதே

    93. மூர்க்கரோ டிணங்கேல்
    • மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

    94. மெல்லினல்லாள் தோள்சேர்
    • பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

    95. மேன்மக்கள் சொற்கேள்
    • நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

    96. மைவிழியார் மனையகல்
    • விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

    97. மொழிவ தறமொழி
    • சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

    98.மோகத்தை முனி
    • நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

    99. வல்லமை பேசேல்
    • உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

    100. வாதுமுற் கூறேல்
    • பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே

    101. வித்தை விரும்பு
    • கல்வியாகிய நற்பொருளை விரும்பு

    102. வீடு பெறநில்
    • முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

    103. உத்தமனாய் இரு
    • உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

    104. ஊருடன் கூடிவாழ்
    • ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

    105. வெட்டெனப் பேசேல்
    • யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

    106. வேண்டி வினைசெயேல்
    • வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

    107. வைகறை துயிலெழு
    • நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

    108. ஒன்னாரைத் தேறேல்
    • பகைவர்களை நம்பாதே

    109. ஓரஞ் சொல்லேல்
    • எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு



    எழுத்து, இலக்கண,பொருள் பிழைகளை சுட்டிக்காண்பியுங்கள்.

    தொகுப்பு உதவி: இணைய தளங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்திச்சூடி விளக்கம் படித்து மெய்மறந்து மெய்சிலிர்த்துப்போனேன்...
      ஆயிரம் கோடி நன்றிகள்...

      நீக்கு
  7. @VANJOOR : தங்கள் வருகைக்கு நன்றி ஐயா.

    அப்பா.. ஆத்திச்சூடி இவ்ளோ பெருசா..!!? நான் ஆயுத எழுத்து வரைதான் இருக்கிறது என நினைத்திருந்தேன்.

    தங்களின் விளக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  8. ஒன்பது வருக்கங்களாக பிரித்து எழுதப்பட்டுள்ளன அவையே கடவுள் வாழ்த்துடன் சேர்த்து

    கடவுள் வாழ்த்து
    உயிர் வருக்கம்
    உயிர்மெய் வருக்கம்
    ககர வருக்கம்
    சகர வருக்கம்
    தகர வருக்கம்
    நகர வருக்கம்
    பகர வருக்கம்
    மகர வருக்கம்
    வகர வருக்கம்


    கடவுள் வாழ்த்து

    ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
    ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

    பதிலளிநீக்கு
  9. ச.மதிவாணன்் 875405301920 மே, 2016 அன்று PM 5:08

    எனது முகநூல்்பக்்கத்்தில்்ஆத்்திச்்சூடிக்்கு விரிவான உரை எழுதி வருகிறேன்் பிடித்்திருந்்தால்் கருத்்துக்்களை பதியுங்்கள்்மதிவாணன்்

    பதிலளிநீக்கு