ஆனால், இப்ப ஒரு சிக்கல். எல்லா வரிகளுக்கும் எனக்கு விளக்கம் தெரியல. 1000 வருடங்கலுக்கு முன் எழுதப்பட்டாலும் இப்போதும் படித்தவுடன் புரிந்துகொள்ள எளிமையானதும் தெளிவானதுமான மொழி தமிழ் என அயல்நாட்டினர் புகழாரம் சூட்டுகின்றனர். ஆனால் தற்க்கால தலைமுறை தமிழனான எனக்கு மிக எளிமையான பாடலான ஆத்திச்சூடிக்குகூட சரியான விளக்கம் தெரியவில்லை.
நான் மட்டும் அல்ல, என்னைப் போல் மேலும் என்னை விட மோசமாக பல பேர் இருக்கின்றார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விடயம்.
சரி, நாம நம்ம கதைக்கு வருவோம்.. இங்க எனக்கு தெரிஞ்ச மாதிரியான விளக்கத்தை இங்க எழுதறன். விளக்கம் தெரியாத வரிகளுக்கு சிவப்பு மை இடுகிறேன். நான் சொல்லியிருக்குற விளக்கம் சரினா ஒன்னும் சொல்ல வேணாம். தப்புனா தப்ப சொல்லி விளக்கம் கொடுங்க. எனக்கு விளக்கம் தெரியாத வரிகளுக்கும் விளக்கம் கொடுங்க.
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்ப்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
- ஔவையார்
அறம் செய்ய விரும்பு - நல்லவற்றை செய்ய ஆசைகொள்
ஆறுவது சினம் - குறைத்துக்கொள்ள வேண்டியது கோபம்
இயல்வது கரவேல் -
ஈவது விலக்கேல் - கொடைத்தன்மையை விட்டுவிடக்கூடாது
உடையது விளம்பேல் -
ஊக்கமது கைவிடேல் -
எண் எழுத்து இகழேல் -
ஏற்ப்பது இகழ்ச்சி - பிச்சை பெருவது இழி செயல்
ஐயம் இட்டு உண் -
ஒப்புரவு ஒழுகு - நற்பண்புடன் நடந்துகொள்
ஓதுவது ஒழியேல் - படிப்பதை நிறுத்திவிடக்கூடாது
ஔவியம் பேசேல் -
அஃகம் சுருக்கேல் -
நான் இங்க சொல்லியிருக்குற விளக்கம் அனைத்தும் சரியா என தெரியவில்லை. செய்யுளில் எழுத்துப்பிழை ஏதேனும் செய்திருந்தால் தமிழ்ப்பெரியோர் பொருத்தருளி என் தவறுகளை சுட்டிகாட்டவும்.
நன்றி : கூகிள்[படம்]