செவ்வாய், 7 ஜனவரி, 2020

திரௌபதியும் - திரை மறைவு சாதி ஒழிப்பும் - 2


"சென்னை - திரௌபதி படத்தை வெளியிட தடை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் புகார் மனு" 

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல.. எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல-னு எதுக்கு இப்படி இராமகிருஷ்ணன் துள்ளி குதிச்சு ஓடுறாருனு தெரியல... ஒரு வேளை கௌசி 3 இலட்ச ரூபாய் with 3 EMI மேட்டரும் இப்படி பட்ட  ஒரு சம்பவத்தோட தொடர்புடையதா இருக்குமோ.!!!  ஒரு சின்ன கணக்கீடு போடுவோம்:

Named Love + Marriage + Money = நாடக காதல்

Multiple Love of Shakthi (Named) + Kowsi Marriage + 3 Lakhs with EMI facility. 

OMG.!!! It matches perfectly.!!!! 

பாருங்களேன், நம்ம சின்ன மூளைக்கு எப்படி தப்பு தப்பா தோணினாலும் எவ்வளவு சரியா பொருந்துதுனு!!! ஆக இவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல. ஆக, நாடக காதலில் உடந்தையாக இருக்கும் அனைவரையும் துகிலுறிக்கிறாள் திரௌபதி.

சரி, நாம திரௌபதி திரை முன்னோட்டத்தை தொடருவோம்.!

வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு பொண்ணோட வீடு எந்த மாதிரியான மனநிலையில் இருக்கும், அவர்களிடத்தில் ஒருவன் பெண்ணை விட்டு விடுவதற்கான பேரம் பேசினால், பாதிக்கப்பட்டவனுக்கு எவ்வளவு கோவம் வரும். அந்த காட்சிதான் பின்வரும் வசனமாக இருக்கிறது என யூகிக்கிறேன். 

“ஏய், மண்ட காய்ஞ்சு போயிருக்கன், ஒவ்வொருத்தரையும் துண்டு துண்டா வெட்டி போட்டுருவன்”

“வெட்டு, அப்படி நீ எது பன்னாலும் அது எங்கலுக்கு சாதகமாதான் மாறும்; அதையும் பன்னு!”

அப்படி கடுங்கோவத்தில் இருப்பவர்களிடம், அவர்களால் மேன்மேலும் ஏதும் செய்ய முடியாது என அவர்களுக்கு இயலாமையை ஏற்படுத்தினால், அவர்களின் உள்ளத்தில் அழுத்தி வைக்கப்படும் கோவத்தின் வெளிப்பாடு எவ்வளவு உக்கிரமாக இருக்கும். அத்தகைய நிலையைதான் மேலேயுள்ள அந்த இரண்டாவது வசனம் ஏற்படுத்துகிறது. 

தன்னால் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோமே என உள்ளத்தில் புழுங்கி பொங்கி வரும் இயலாமையின் வெளிப்பாட்டை எவர் ஒருவராலாவது தாங்க இயலுமா.!? சாது மிரண்டால் காடு கொள்ளுமா.!!??

அடுத்த காட்சி:

"இந்த கிராமத்துக்குள்ள யார் வரனும், யார் கால் வைக்கனுங்கறத நாங்கதான்டா முடிவு பண்ணுவோம். இதுக்கு அப்புறம் இவனையும் இவனுங்க ஆளுங்களையும் நம்ம கிராமத்துல எங்க பாத்தாலும் வகுந்து எடுங்கடா; என்ன ஆனாலும் நான் பாத்துக்கறன்"

ஏதோ ஒரு கிராம பஞ்சாயத்து, குற்றம் செய்தவர்கள் ஒரு குழுவாக எதையோ செய்திருப்பார்கள் போல, நாட்டாமை படத்துல ஊரை விட்டு ஒதுக்கி வைக்கறதபோல, அவங்கள கிராமத்துக்குள்ள வரக்கூடாதுனு சொல்றாங்க. மீறி வந்தா அடிச்சி தொரத்த சொல்றாங்க. இது வழமையான ஒரு சினிமா வசனம் போலதான் எனக்கு படுது.


"கருணா, அவன் ஊரு மண்ணுல நாம கால வைக்கனும்னா, அவன் வூட்டு பொண்ணு மேல நாம கைய வச்சே ஆகனும்!"

இது முந்தைய கட்சியோட தொடர்ச்சி மாதிரி தெரியுது. ஆனா, எனக்கு ஒன்னு வெளங்கல, ஊருக்குள்ள வர்றதுக்கு எதுக்கு பொண்ணுமேல கைய வைக்கனும்.!!??? ஒருவேளை, கலப்பு திருமணம் செஞ்சா ஜாதி ஒழிஞ்சிடும்னு சொல்லி கொடுக்குற முட்டாத்தனமான அறிவு ஜீவிங்க மாதிரியோ..!!! இருக்கலாம்! யார் கண்டா, படம் முழுசா வெளிவந்தாதான் தெரியும். 

இந்த எடத்துல நம்ம திராவிட முற்போக்குகள் வேணும்னா பொங்க வைக்கலாம். ஏன்னா, முக்கிய வில்லனோட அல்லக்கையோட பேரா நம்ம முன்னாள் முதல்வரின் பாதி பெயரை வச்சிருக்காங்க.!

அடுத்ததா வர்ற காட்சி வசனம், ஏகத்துக்கும் செம்ம மாஸா இருக்கு. இணையத்துல நடக்குற களேபரங்களுக்கு இந்த காட்சியும் ஒரு முக்கிய காரணம். 

"எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம். அதுல யாரு கைய வச்சாலும் கைய வெட்டுவோம். என்னனு நெனச்ச..."

இந்த வசனத்தை காட்டிதான், பாருங்க இவனுங்களுக்கு எவ்ளோ சாதி வெறி... அது இது-னு பொலம்பிக்கிட்டு இருக்கானுங்க..!! கலப்பு திருமணம் செஞ்சா வெட்டுவோம்னு சொல்றாங்கனு இந்த வசனத்தை வச்சி தான் பேசுறாங்க... அதை எப்படிதான் கண்டுபுடிக்கிறாங்களோ.!

"பெண்கள் மீது கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல; தலையை!!!" எனும் பாகுபலி பட வசனம் எப்படியோ அப்படிதாங்க இந்த வசனமும். உண்மையா சொல்லனும்னா அதைவிட இது சற்று வன்மம் குறைவுதான். பாகுபலி வசனத்தை ஏற்றுக்கொண்டுவிட்டு திரௌபதி வசனத்தை ஏற்க மறுத்தால், நிச்சயம்  நீங்கள் நல்ல மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. 

இதுலேர்ந்து ஒன்னு மட்டும் தெரியுது, திரௌபதி வசனத்தை எதிர்க்கிறவங்களுக்கு பாகுபலி வசனம் புடிக்கவேயில்லைனு.! 

சரி முடிவுக்கு வருவோம்: 

ஆக, இந்த முன்னோட்டத்தில், 
  • எந்த சாதியையும் தரக்குறைவாக பேசவில்லை. அப்படி இருப்பதை போலவும் காட்சிப்படுத்தப் படவில்லை.
  • எந்த சாதியையும் உயர்த்திப் பேசவும் இல்லை.
  • சாதி கலப்பு திருமணங்களை எதிர்ப்பதை போலவும் ஏதும் காட்சிப்படுத்தப் பட்டதாகவும் தெரியவில்லை.
  • சாதி வெறியை தூண்டும் விதமாகவும் ஏதும் காட்சிகள் இருப்பதாகவும் தெரியவில்லை

குறியீடுகள்:
  • நாயகன் கொலை செய்யும் காட்சியில், தலையில் கருப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான துணியை கொண்டு முகத்தை மூடிக்கொண்டிருக்கிறார். (விஜயகாந்த் கட்சிக்காரரா இருக்கலாம்  - தருமபுரி சம்பவத்தில் இறந்துபோன நாகராஜ் (பெண்ணின் தந்தை) விஜயகாந்த் கட்சிக்காரர் : இப்படியும் யோசிச்சு பாருங்க )
  • ஒரு காட்சியில், பின்னால் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் தோழர் கௌசல்யா போல காட்சி தருகிறார். ஆனால், உடனிருக்கும் பெரியவர்தான் யாரென தெரியவில்லை.! (கொளத்தூர் மணி, தோழர் தியாகு, எவிடன்சு கதிர் அல்லது தோழர் இராமகிருஷ்ணன்: சும்மா நாமலா நெனச்சிப்போம்)
  • காதல் ஜோடி - தருமபுரி சம்பவம் இளவரசன் 
  • கைபேசி காணொளி - அபலைப் பெண்ணின் கதறல் - பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுகிறது.
  • அடங்குனா அடங்ககூடாதுனு அண்ணன் சொல்லியிருக்கிறப்ல - அடங்க மறு; அத்து மீறு;
  • வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ளவர் - ஒரு சாயலில் லைட்டா தோழர் திருமாவளவன் போல் காட்சியளிக்கிறார்.


பேசு பொருட்கள்:

பெருசா பரிச்சையமில்லாத நாயகன், யாரென்றே தெரியாத இயக்குநர் - ஆனாலும் 25 இலட்சம் பார்வைகளை கடந்துள்ளது திரௌபதி முன்னோட்டம். அது ஏன்னு கொஞ்சம் மனசாட்சியோட யோசிங்க, இந்த படத்தோட அவசியம் புரியும்.

இந்த படத்தின் இயக்குநர்தான் "ஜல்லிக்கட்டு - மெரினா புரட்சி"-யை தொடங்கியவர்.

குடும்பத்தோட போய் பாருங்க. அம்மாவும் பையனும் பாக்கனும்னாலும் பரவாயில்லை; அப்பாவும் பொண்ணும் கண்டிப்பா பாருங்க. திரையரங்கம் செல்ல முடியாவிட்டாலும் தரவிறக்கம் செய்தாவது பாருங்கள் - எனும் இயக்குநரின் அறிக்கை

Crowd Funding 

நாடக காதல் ஆதரவாளர்களின் வயிற்றில் புளியை கரைத்திருப்பது மற்றும் மெட்ராஸ், கபாலி, காலா, பரியேறும் பெருமாள் மற்றும் அசுரன் போன்ற படங்களுக்கு எதிர் வினையாகவும் பார்க்கப்படுவது.

ஆக மொத்தத்தில்... ஆக I AM WAITING....




திங்கள், 6 ஜனவரி, 2020

திரௌபதியும் - திரை மறைவு சாதி ஒழிப்பும் - 1

திரௌபதி - மூனு போஸ்டர், ஒரு டிரெய்லர் அவ்வளவு தான் இன்றைய தமிழ் இணைய உலகத்தை அதகலபடுத்திக்கிட்டு இருக்கு. எந்த பதிவையும் முடிக்க முடியாம இருக்குற என்னையவும் இப்படி ஒரு பதிவு எழுத வச்சிருக்குனா பாத்துக்கங்களேன்!

யாரும் எடுக்கத் துணிந்திடாத ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இணையமே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. வெகு சனத்தின் உள்ளக் குமுரல்களாக ஆதரவு குரல்களும் அடி பட்ட பாம்பென எதிர் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. சரி இந்த கதைய அப்புறமா பாக்கலாம். இப்ப என்ன வெளிவந்திருக்குனு பாக்கலாம்.

முதல் படம்
சாதிகள் உள்ளதடி பாப்பா: - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

இதுதாங்க அந்த முதல் படம்
யதார்த்தத்தில் சமூகத்தில் சாதிகள் இருக்கின்றன எனக் கூறி, ஒரு பெண் (படத்தின் நாயகி) சுதந்திர போராட்ட வீரர் தியாகி ஐயா இராஜரிஷி சேலம் அர்த்த நாரீச வர்மா அவர்களின் படம் தாங்கியபடி இருக்கிறார்

இங்கே பல பேருக்கு ஐயா அர்த்தநாரீச வர்மா யாரென்றே தெரியாது. ஆனாலும் இந்த படத்தில் உள்ள வசனத்தை வைத்தே சர்ச்சையானது. இது வழமையானதுதான். இந்த போஸ்டர் வெளியானதும் எனக்கு வந்தது ஒரே கேள்விதான். ஏன் ஐயா அர்த்தநாரீச வர்மா படத்தை வைத்திருக்கிறார்கள் என்பதுதான். ஆசீர்வாதத்திற்கா அல்லது படத்திலும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது படம் வெளிவந்த பின்புதான் தெரியும்.








இரண்டாவது படம்:
அடிச்சா திருப்பி அடி


இந்த போஸ்டர் வசனம் எனக்கு இரண்டு பேரின் வசனங்களை நினைவு படுத்தியது.

திருமாவளவனின் அடங்க மறுஅத்து மீறு; திமிரி எழு; திருப்பி அடி;”
மாவீரன் குருவின் அடிச்சா திருப்பி அடிக்கிறவன்தான்டா சத்திரியன்

உனக்கு  ஏன்டா இப்படி தோனுச்சினு கேக்கறீங்களா.? அது ஏன்னா, இந்த படத்தோட மையக் கரு. நாடக காதல் எதிர்ப்பு விழிப்புணர்வுதாங்க இந்த படத்தின் மையக் கரு.

நிஜத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் மோகன் ஒருமுறை தெரிவித்ததாக நியாபகம். ஆக, படத்தில் பல விஷயங்கள் நம் பார்வைக்கு வந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன்


மூன்றாவது படம்:
நவீன நாடக காதல்காவியம்


இந்த ஒளிப்படத்தில் இருக்கும் இந்த வாசகம் உண்மையிலேயே ஒரு சர்ச்சைதான். ஏன்னா, நம்ம ஊரு புரட்சி, பகுத்தறிவு, தலித் மற்றும் முற்போக்கு வியாதிகளுக்கு நாடக காதல்அப்படிங்கற ஒரு சேதி கெடையவே கெடையாது!. ஆனால், 3 இலட்சத்துக்கு பஞ்சாயத்து மட்டும் பண்ணிவிடுவாங்க. அவ்ளோ நல்லவங்க. சரி, நாம விஷயத்துக்கு வருவோம். இதுவரைக்கும் வந்த இந்த 3 போஸ்டரும் ஒரு விஷயமே கிடையாது இதுக்கு அப்புறம் வந்த டிரைலரோடு ஒப்பிடும்போது. நாம இனி ட்ரைலர்குள்ள போவோம்.

The Trailer: திரை முன்னோட்டம்

இந்த ட்ரைலெர், இதற்கு முன் வெளிவந்த போஸ்டர்களை விட மிக அதிக அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. வெளிடப்பட்ட 24 மணி நேரத்தில் 10 இலட்சம் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்ப்பையும் பெற்றிருக்கு. வெறும் ட்ரைலரை கண்டே சாதிவெறி படம்னு சொல்றாங்க. எதன் அடிப்படையில் சொல்றாங்கனு எனக்கு விளங்கவேயில்லை

இந்த ட்ரைலரின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் இரண்டு மறைமுக வெளிப்பாடுகளை உங்களுக்கு சுட்டிகாட்றேன். 1. முகநூலில் ஒருவர் திடீரென திருமாவளவன் குறித்து மிகவும் நல்லவர், வல்லவர், ஆகச் சிறந்த புரட்சியாளர் என ஒரே புகழாரம், மேலும் அவரை மக்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 2. கீச்சுவில் ஒரு பெண்மணி (புரட்சி பெண்மணி) நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமணங்கள்தான் (arranged marriage) நாடக காதல் திருமணங்கள் எனும் ரீதியில் பதிவிட்டிருந்தார்

இவையிரண்டும் திரௌபதி தாக்கத்தின் மறைமுக வெளிப்பாடுதான்நேரடியாக பலர் இது சாதிவெறி படம் அது இதுவென ஏகத்துக்கும் பொருமித்தள்ளிக் கொண்டிருக்கின்றனர். சரி அப்படியென்னதான் இந்த ட்ரைலரில் இருக்கிறது? வாருங்கள் காணலாம்.

இதுவரையும் நீங்கள் திரௌபதி படத்தின் ட்ரைலெரை காணவில்லையெனில், பின்வரும் இந்த நிரலியை சொடுக்கி YouTube தளத்தில் கண்டிப்பாக காணுங்கள்
அஞ்சு கொலை பண்ண மூஞ்சாடா இது…. ஜாதி வெறி புடிச்ச நாயே

...ரெண்டு புல்லட் உள்ள எறங்கனாதன இன்ட்றஸ்டிங்கா இருக்கும்!” 

இப்படிதாங்க அந்த ட்ரைலர் தொடங்குது. ஒரு மூன்று பேர் கொண்ட குழு துப்பாக்கி முனையில் நாயகனை மிரட்டிக்கொன்டிருக்கின்றனர். இந்த காட்சியில எனக்கு பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை

அக்கியூஸ்ட்டோட பேரு பிரபாகரன்; ஊரு விழுப்புரம்; அவன் வைஃபோட தங்கச்சி வேற காஸ்ட்ல ஒரு பையன கல்யாணம் பண்ணதால அந்த பொண்ணையும் அவன் வைஃபையும் கொலை பண்ணிட்டு அரெஸ்ட் ஆகியிருக்கான்! ”
அட, இந்த காட்சியில் நிறைய பிடிபடும் போல இருக்கே.! பேரு பிரபாகரன், நம்ம தேசிய தலைவரோட பேரு. ஊரு விழுப்புரம்.. அட நம்ம பக்கத்து ஊரு. ஆக அடுத்த வசனம்தான் படம்.! இது நாம அவ்வப்போது செய்திதாட்களிலும் கண்டு கேட்டு திருந்தாத சாதி வெறி பிடித்தவர்கள் என கடந்துபோகும் செய்திதான். ஆனால் இந்த கட்சி ஏன் என படம் வெளியானபின்புதான் தெரியும். அதுவரை நம் கற்பனைகளை விஸ்தரித்து வைக்கலாம்.

வீடியோல்லாம் வேண்டாணே எங்க அப்பா அதெல்லாம் பாத்தா செத்தே போயிடுவாருணே!”

நீ ஓடி வரும்போதே அங்க உங்க அப்பன் உசுர விட்டிருப்பான்!”

இந்த காட்சி வலி கொடுப்பதாகவும் கோவமூட்டுவதாகவும் இருக்கு மக்களே! வீட்டை விட்டு  ஓடி வந்த ஒரு பெண்ணிடம் ஒருவன் மிரட்டலாக பேசுவதைப் போல தெரிகிறது. அப்பெண் நிர்கதியாய் நிற்கிறாள்; அவன், அப்பெண்ணிடம் ஏளனம் பேசுகிறான்

படிக்காதது உன் தப்பு; உன் மனசாட்சியை தொட்டு சொல்லு நீ பண்றது தப்பு இல்ல?”

தப்பே இல்ல! அடங்குனா அடங்ககூடாதுனு எங்க அண்ணன் சொல்லியிருக்கிறாப்ல. பெரிய வூட்டு பொண்ண கல்யாணம் பண்ணா மட்டும்தான் லைஃப் கெத்தா இருக்கும்னு சொல்லியிருக்கிறாப்ல

இந்த காட்சிதாங்க இணையமே பற்றி எரிந்துகொண்டிருப்பதற்க்கு காரணமாக இருக்கும். யாரும் வெள்ளித்திரையில் பேசாத விஷயமும் இதுதான். அய்யா மருத்துவர் இராமதாசு தொடங்கி, சுகி சிவம், வழக்கறிஞர் சுமதி வரைக்கும் நாடக காதல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் இதுதான். ஒரு இயக்கமாக இதை செய்கிறார்கள் இதனை மட்டுப்படுத்த வேண்டும் தடுக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் அனைவரது விருப்பமாக இருக்கிறது

அடங்குனா அடங்ககூடாதுனு எங்க அண்ணன் சொல்லியிருக்கிறாப்ல” - இது அத்து மீறு; அடங்க மறு-னு நம்ம திருமாவளவன் சொல்லி கொடுத்த மாதிரியே இல்ல.!

திரௌபதி ட்ரைலர் தக தக தக னு கொழுந்துவிட்டு எரிவதற்கு இதுவும் ஒரு காரணம்

அடுத்த காட்சி,

ஜாக் மாதிரி பசங்க மனசுல வெஷத்தை வச்சுட்டானுங்க; அதை மாத்த நாம ஒரு பெரிய புரட்சி பண்ணியாகனும்!”

இங்க நம்ம நாயகன் தவறான வழிக்கு போகிற அதாவது நாடக காதலுக்கு துணை போகிற இளைஞர்களை திருத்த முயற்ச்சி பண்றாருனு நினைக்கிறேன்.!

இதற்கு அடுத்த காட்சிதான், இந்த தலித்திய முற்போக்கு வியாதிகள் இணையத்தில் பொங்க வைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்

நான் இப்படி பண்ணலனா, என்னை கொன்னுட்டு, தண்டவாளத்துல போட்டுட்டு, பழிய இவர் மேல போட்டுடுவேன்னு சொன்னாங்க.!”

இந்த காட்சி எனக்கு, அந்த 19 வயசு பையன் தருமபுரி இளவரசன் மரணத்தையும் விழுப்புரம் நவீனா கொலை பாதகன் செந்தில் கை கால் இழந்த சம்பவத்தையும்தான் நினைவூட்டியது

ஆம், மக்களே, இரண்டு மூன்று முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அது தற்கொலைதான் என கூறிய பிறகும் இன்றுவரை அதை கொலை என்றே பொங்க வைத்து பிழப்பு பார்க்கும் அந்த தலித்திய வியாதியர்களை அப்படியே நினைவு படுத்துகிறது.

அடுத்து, சிறுமி நவீனாவை கொலை செய்த அந்த அயோக்கிய நாய் செந்தில். இந்த கொலைகாரனுக்கு ஆதரவாக விசிக கட்சியினர் சுவரொட்டிகளெல்லாம் ஒட்டியிருந்தனர். அன்றைய புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அநீதி நெறியாளராக குணசேகரன் செயல்பட்டு செந்திலை பேட்டி கண்டு விவாதம் நடத்தினர். ஆனால், உண்மையில் குடித்துவிட்டு தண்டவாளத்தில் விழுந்து கை, கால்களை இழந்திருந்தான். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது

அம்மனம், பொண்ணுங்களுக்கு மட்டும்தான் அவமானமா! ஏன் உனக்கு இல்ல!”

ப்பாஎன்ன மாதிரியான வசனங்க இதுஅப்படியே சும்மா செவுள்ல அறைஞ்ச மாதிரிசெம ஷார்ப். நம்ம அஜித் படம், “நேர்கொண்ட பார்வை”-ல வருமே ஒரு வசனம், “NO MEANS NO”. அந்த மாதிரி. என்னஅந்த படத்துல கொஞ்சம் திரும்ப திரும்ப சொல்ல வேண்டி இருந்துச்சு. ஆனால், இங்க அதுக்கு அவசியம் இல்ல. பெண்மை போற்றுதும்

இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படிதான் கொடூரமா கொல்லனும்; நீங்க எதை பத்தியும் கவலை படாதீங்க.! உங்களுக்காக நான் அப்பியர் ஆவறேன்!”

இந்த வசனம் நம்ம பொது சனத்தோட பொது வாசகம். அதனால இது ஒன்னும் அவ்வளவா கவனிக்க வேண்டியதில்லை. சமீபத்துல இந்த ஆந்திர மருத்துவர் கொலைக்கு நடந்த என்கவுன்டர்-க்கு ஆதரவு வந்துச்சே; அந்த மாதிரி.

வெவசாய தற்கொலை, கடன் தற்கொலைனு செத்தவன் பாதிபேரு பொண்ணை பெத்தவன்தான்டா

இந்த வசனம் ரொம்ப ஆழமான தகவலை தருகிறது. உட்பொதிந்திருக்கும் செய்தி மனசை உலுக்குது! ஏன் பெண் பிள்ளையை பெற்றவன் மட்டும்.? அப்படினு ஒரு கேள்வியை உங்க மனசுகிட்ட நீங்களே கேட்டு பாருங்க. உங்களுக்கும் இந்த வசனம் சுடும்.

உன் வூட்டு பொண்ண கல்யாணம் பண்ணியிருக்குற பையன்; உங்களுக்கு பயந்துகிட்டு இப்ப யான் பாதுகாப்புலதான் இருக்கான், நான் என்ன சொல்ரனோ அதைதான் அவன் கேட்பான்.”

இந்த காட்சி வசனம் என்ன சொல்லுதுனு புரியுதா மக்களே! இதுதான் நாடக காதலுக்கு முடிவுரையின் முந்தைய கட்டம். பெண் வீட்டுகாரர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு தேவையான ஏதோவொன்றை செய்துகொள்ளவோ முயற்ச்சிக்கும் கட்டம். அப்படிதான் யூகிக்கிறேன்

இப்படியான ஒரு சூழலை சந்திக்கும் ஒரு குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் எந்த மாதிரியான உளவியல் சிக்கலை சந்திப்பார்கள், அவர்களுக்கு ஏற்படும் அவமானம் எத்தகையது, அது சமுகத்தில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என சிந்திக்க, அது குறித்து பேச கூட இங்கு யாரும் இல்லை. அதன் வெளிப்பாடுதான் இன்று துரௌபதிக்கு கிடைத்திருக்கும் ஆதரவு.

ஏய், மண்ட காய்ஞ்சு போயிருக்கன், ஒவ்வொருத்தரையும் துண்டு துண்டா வெட்டி போட்டுருவன்

வெட்டு, அப்படி நீ எது பன்னாலும் அது எங்கலுக்கு சாதகமாதான் மாறும் அதையும் பன்னு!”



மீதமுள்ளவற்றை நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்... ஒரு சமீபத்திய சேதி, திங்களன்று (07-01-2019) கோவை இராமகிருஷ்ணன் திரௌபதி படத்தை தடை செய்ய சொல்லி புகார் அளிக்க போகிறாராம். 

இதன் தொடர்ச்சியை முடிந்தால் இவருடன் சேர்த்தே காணலாம்...
(எழுத்துப் பிழைகள் சொற்ப்பிழைகள் ஏதெனுமிருப்பின் பொருத்தருளவும்... இது அவசர வெளியீடு...)

செவ்வாய், 30 ஜூலை, 2019

சிறுதுளி சாதனை: 3 நிமிடங்களில் 10000 செடிகள் "பாரதி வனம்"



ஜூலை 25, 2019 எல்லோரையும்போல் அல்லாமல் ஒரு உயரிய பெருஞ்செயலில் பங்குபெறப்போகும் மகிழ்வோடு மலர்ந்தது.

ஆம், 

கோவையில் குளம், ஏரி, நொய்யல் ஆறு போன்ற நீராதாரங்களை புனரமைத்துவரும் அரசு சாரா அமைப்பான சிறுதுளி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் "மியாவாக்கி" முறையில் 5 நிமிடங்களில் 10000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மரக்கன்றுகளை நடுவதற்காக பாரதியார் பல்கலையில் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளுக்கும், தன்னார்வலர் அமைப்புகளுக்கும், RAF-க்கும், வனத்துறையினருக்கும் மற்றும் பல அமைப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

"மியாவாக்கி" என்பது குறுகிய காலத்தில் மண் சார்ந்த மரக்கன்றுகளை கொண்டு ஒரு வனத்தையே உருவாக்கும் முறையாகும்.

5000 ஆர்வளர்கள் மாணவர்களைக் கொண்டு நபருக்கு 2 மரக்கன்றுகள் வீதம், 5 நிமிடங்களில் 10000 மரக்கன்றுகளை நடுவதுதான் திட்டமாகும். இத்திட்டத்தில் உருவாக்கப்படும் வனத்திற்கு "பாரதி வனம்" எனப் பெயரிட்டிருந்தனர். 

பாரதி வனத்தை உருவாக்க வரும் மாணாக்கர்களையும் ஆர்வளர்களையும் ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழு அமைத்தார்கள். அக்குழு உறுப்பினர்களாகத்தான் நானும் நான் பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து (Hoffensoft) மேலும் 10 பேரும் சென்றிருந்தோம். இக்குழுவில் சிறுதுளி உறுப்பினர்களோடு Pricol நிறுவனத்தினர்கள் 20க்கும் மேற்பட்டோரும் இடம்பெற்றிருந்தார்கள்.  
இந்நிகழ்வில் பங்குபெற வருவோரை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும்? யார் யார் எங்கே நிற்க வேண்டும்? எந்த மாதிரியான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்? உள்ளிட்ட பல சேதிகளை முடிவு செய்வதற்காக முதல் நாள் பாரதியார் பல்கலையில் குழுமினோம். 

பாரதி வனம் அமையப்போகும் இடத்தை பார்வையிட்டோம்.

அப்பகுதி பல்கலையின் நுழைவுவாயிலிலிருந்து உட்புறத்தில் சுமார் 1 கி.மீ. தொலைவில் இருந்தது. பாரதிவன பகுதியை சுற்றிலும் மிதமான புதர்களும் சற்று இடைவெளிகளுக்கிடையில் மரங்களும் இருந்தன. வனத்தில் மேற்கிலிருந்து மருதமலையின் இடையில் இருந்தபடி அழகன் முருகன் சுப்பிரமணியன் அருள்பாலித்துக்கொண்டிருந்தார். வடக்குப்புறத்தில் புதர்களுடனேயான ஒரு ஓடை நீரற்ற நிலையில் உறங்கிக்கொண்டிருந்தது. கிழக்கில் குறிப்பிடும்படி ஏதுமின்றி சுற்றுசுவரும் தெற்கில் பல்கலையில் நிலப்பரப்பும் இருந்தது.

அங்கே,

செடிகள் நடப்படும் பகுதியில் ஒரு சீமைக் கறுவை மரமும் வேறு சில மரங்களும் இருந்தன (கருவேல மரம் என நினைக்கிறேன்). 10000 குழிகளையும் தோண்டியிருந்தார்கள். நிலம் 10 கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவைகளுக்கு A முதல் J வரையிலென பெயரிட்டிருந்தார்கள். ஆங்காங்கே செடிகளும் வைக்கப்பட்டிருந்தன. சொட்டு நீர் பாசன குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாரதியார் பல்கலை மாணவர்கள் சிலர் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த செடிகளை குழிகளில் இட்டுக்கொண்டிருந்தார்கள். எதிர்புறம் கிழக்கில் ஒரு சிறிய மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கொடியசைத்ததும் செடிகளை நடவேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. 

முதல்நாள், நெடுக்குவாட்டில் சொட்டு நீர்பாசன குழாய்களுக்கு இணையாக இரட்டை வரிசையிலிருந்து முன்னோக்கி நபருக்கு வலதுபுறமாக தலா இரண்டு செடிகளை நட செய்ய வேண்டும் என இறுதி  செய்யப்பட்டு அடுத்தநாள் முடிந்த மட்டும் சீக்கிரமாக வருவதென கிளம்பினோம்.

அடுத்தநாள்,

காலை அலுவலகம் சென்று, இருக்கும் பணிகளை இயன்ற மட்டும் முடித்து மதியம் 1 மணியளவில் அலுவலகத்திலிருந்து புறப்படுவதாக முடிவு செய்தோம். ஆனால், மதிய உணவு வருவதற்கு சற்று தாமதம் ஆனதால், 1.30 மணிக்குதான் கிளம்ப முடிந்தது. 2 மணிக்கெல்லாம் பல்கலைக்கு வந்துவிட வேண்டும் என நினைத்திருந்தோம், ஆனால், 2.15 மணிக்குதான் வர முடிந்தது. 

பல்கலைகழகத்தில் ஏற்கனவே ஏராளமான மாணாக்கர்கள் குழுமியிருந்தார்கள். 3 மணிக்கு கலையரங்கத்தில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். கலையரங்கத்தில் பேச்சுரைகள் முடிந்து மாலை மணி 4.10 அளவில் செடிகளை நடுவதாயிருந்தது. நாங்கள் நேரடியாக வன களத்திற்க்கு சென்றோம். அங்கே ஒருங்கிணைப்பாளர்களுக்கான தன்னார்வலர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு ஆளுக்கொரு கட்டத்தில் சென்று நிற்கலானோம். நான் முதலாவது கட்டத்தில் "A" நின்றேன். 

மாணவர்கள் கூட்டங்கூட்டமாக வந்துகொண்டிருந்தார்கள். எதிர்புறமைந்த மேடையிலிருந்து ஒலிப்பெருக்கியில் கல்லூரியின் பெயர்களை கூறி அவர்களுக்கான கட்டத்தை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அறிவிப்புக்கும் மாணவர்கள் வயல்வெளியில் ஓடைகளின் கரைகளோரம் அமைந்திருக்கும் பனஞ்சாரைகளைப் (பனைமர வரிசை) போல் சாரை சாரையாக அவர்களுடைய கட்டங்களை நோக்கி சென்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே  ஒருங்கிணைப்பாளர்களாக நாங்கள் நின்றிருந்தோம். 

தொடக்கத்தில் 3500 மாணவர்கள் வரையில்தான் வருவார்கள் என்றே எண்ணியிருந்தோம். ஆனால், நேரம் செல்ல செல்ல 5000-ஐ கடந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். ஒரு நேரத்தில் சில கட்டங்களில் 100, 300 என ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. ஆனால், அதுவும் சற்று நேரத்தில் நிறைவடைந்தது. செடிகளை நடுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டேயிருந்தது. சில மாணவர்கள் வெளியேறிச்சென்றார்கள். சிலர் புதிதாக வந்தார்கள். மாணவர்கள் மட்டுமல்லாது சில தன்னார்வலர்களும் வந்திருந்தார்கள். கிட்டதட்ட எல்லா செடிகளுக்குமே ஆட்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். மேலும் ஒரு 500க்கும் மேற்பட்டோர் கலையரங்கத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். 

ஏற்கனவே RAF-ம் வன காவற் படையினரும் வந்திருந்தார்கள். கலையரங்கத்தில் நிகழ்ச்சி முடிந்து சிறுதுளியின் நிறுவனர், 'சேர்மேன்' என எல்லோரும் வந்தனர். சற்று நேரத்தில் கொடி அசைக்கப்பட்டது. 

செடிகளை நட்டவுடன் இரண்டு கைகளையும் உயர்த்தி காண்பிக்க சொல்லி ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் விறுவிறுவென செடிகளை நட்டனர். சற்று நேரத்தில் சிலர் மட்டும் ஆங்காங்கே தங்களின் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்தனர். கொடி அசைத்து முடித்த மூன்றாவ்து நிமிடத்தில் எல்லோருமே தங்களின் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்தனர். 

5 நிமிடங்களில் 10000 செடிகளை நடுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி மூன்றே நிமிடங்களில் பெரும் வெற்றி பெற்றது. 

செடிகளை நட்டு முடித்ததும் ஒவ்வொரு குழுக்களாக கலைந்து சென்றனர். வனத்துறையினரும் சிறுதுளி குழுவினரும் செடிகளை சுற்றியிருந்த நெகிழிப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர் மேலும் ஒவ்வொரு செடியும் சரியான முறையில் நடப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொண்டிருந்தனர். மேடையிலிருந்து ஒவ்வொரு கல்லூரிக்கும், பள்ளிக்கும், அமைப்புகளுக்கும் நன்றி செலுத்திக்கொண்டிருந்தார்கள். 

பத்திரிக்கையாளர்கள், சீருடை புடவை அணிந்திருந்த ஒரு குழுவினரை செடிகளை நடுவதைப் போல் நடிக்க வைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பாவம், செடிகளை நடும்போது எங்கே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனதான் தெரியவில்லை. ஏனோ ஊடகங்களுக்கு கவர்ச்சியாய் ஒரு ஜோடிப்பு தேவைப்பட்டிருக்கிறது!

எல்லோரும் சென்றபின் சிறுதுளி குழுவினருடன் சில ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் எங்கள் அலுவலகத்திற்கு புறப்பட்டோம்.

அன்றைய தினம் அவ்வளவு அருமையாக அமைந்தது. சில நற்செயல்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்க்கப்பட்டவர்களில் ஒருவனாக நான். 

ஞாயிறு, 23 ஜூலை, 2017

பூரணி பொற்கலை – சிறுகதை 1 : பிராது - வாசகர் விமர்சனம்

நூலின் பெயர் : பூரணி பொற்கலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
வகை : சிறுகதை தொகுப்பு (பொது)
விமர்சகர் : கீழூர் த.இளம்பருதி
விலை : ரூ.90 /-
நூலின் அட்டை : (முன் அட்டை)

ஆசிரியர் குறிப்பு:
நம்மில் பலருக்கு தெரிந்திருக்ககூடிய மிக பிரபலமான ஒரு எழுத்தாளர் கண்மணி குணசேகரன். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர். எழுத்துலகின் நடுநாட்டின் (கடலூர் + விழுப்புரம்) ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஒரே ஒரு முறை நேரில் கண்டிருக்கிறேன். நெய்வேலி இந்திரா நகருக்கு (வடகுத்து) நாட்காட்டி விழா ஒன்றிற்கு வருகை தந்திருந்தார், அப்போதுதான் கண்டேன். பேசலாம் என்று நினைத்தேன், பின், வேண்டாம் என விட்டுவிட்டேன்.

விமர்சனம்:
நான் சமீபத்தில் படித்த சிறுகதைகளிலே இவ்வளவு விறுவிறுப்பாக எந்த கதையையும் படிக்கவில்லை. படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. அதிலும் முழுக்க முழுக்க சொற்கோர்வைகள் அனைத்தும் கடலூர் மாவட்ட வட்டார வழக்கிலேயே இருப்பது மண்மனத்தை மனக்கண்ணில் விரவி கிடத்துகிறது.

இந்த சிறுகதையை சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம், “தொலைந்துவிட்ட/திருடப்பட்ட நகையை கண்டறிந்து மீட்டு தருமாறு கடவுளிடம் கொடுக்கப்படும் புகார் மனு மீது நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது! நகை மீட்கப்பட்டதா என்பதுதான் கதை.”

இக்கதையின் மாந்தர்கள் கண்களுக்குள் நிழலாடுகின்றனர். கதை வடித்திருக்கும் இயல்பு, படிக்கும்போது வெகுவாக ஈர்க்கிறது.

முக்கிய கதாபாத்திரங்கள்:
வேடப்பர் – குலதெய்வ கிராமிய கடவுள்.
தனமணி அம்மாள் – புகார் மனு கொடுப்பவர்.

புகார் மனுவை படிப்பதில் தொடங்கும் கதை, வேடப்பருக்கும், தனமணி அம்மாளுக்கும் இடையேவே அவர்களை சார்ந்தே நகர்கிறது. மனுவை படித்துவிட்டு அதிர்ந்து தன் குதிரையிடத்திலும், தமுக்கு வீரனிடத்திலும், நாயினிடத்திலும் கடிந்துகொள்ளும் வேடப்பரின் செயல் கதையின் தொடக்கத்திலேயே வேடப்பரோடு சேர்ந்து நமக்கும் படபடப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது. மயிர்கூச்செறியும் ஒரு திரைக்காட்சியில் இருக்கையின் நுனியில் நகர்ந்து அமர்ந்து கவனிப்போமல்லவா அப்படியொரு  உணர்வை கதையின் அடுத்தடுத்த ஒவ்வொரு நகர்வும் நமக்கு ஏற்படுத்துகிறது.

வேடப்பர் தன் மக்களுக்காக வருந்தும் நேயம் மனதை பிசைகிறது. வேடப்பர் பேசும் ஒரு சொற்றொடரை இங்கு தருகிறேன். கிராமங்களில் மக்கள் தங்கள் குலதெய்வங்களை இறை எங்கிற ஒரு நிலையை தாண்டி ஒரு பாசப் பிணைப்புகளுடனேயே வாழ்வதை வெகு அழகாக இச்சிறுகதையில் உணரலாம்.

வேடப்பர் பேசும் வசனம் :
“நம்ப சனங்க கஷ்டத்திலியும் நஷ்டத்திலியும் இடிபட்டுக்கிட்டுக் கெடக்கறப்ப, நமக்கு மட்டும் என்னா தூக்கம் வேண்டிக்கெடக்கு…”

வேடப்பருக்கும் குதிரைக்குமான உறவு வெகு அழகாக காட்டப்பட்டிருக்கிறது. காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது என குதிரை நினைத்துப் பார்க்கும் நிகழ்வில் மக்கள் எப்படி மாறிவிட்டிருக்கிறார்கள் என்பது வெகு எளிமையாக படம் பிடித்துக்காட்டப்பட்டிருக்கிறது. 

வேடப்பரிடம் கோபித்துக்கொள்ளும் மனிதனின் செயலாக ஒரு வசனம் :
“என்னமோ ஒலகத்துல எவனும் செய்யாத தப்ப செய்ஞ்சிட்டான்னு என்னா ஏதுன்னு கேக்காம எடுத்த எடுப்புல கையக்கால இழுத்துட்டுது இந்த வேடப்பரு.”

இந்த வசனங்களையெல்லாம் பாருங்க, இந்த கிராமத்து மனிதர்களுக்கும், கடவுள்களுக்கும் இடையில்தான் எவ்வளவு அழகான ஒரு உறவு நிலை இருந்திருக்கிறது. ஆழமான பற்றுதலும், நெருக்கமும், அழகான உறவும், கடவுள்களிடத்தில் அவர்கள் கொள்ளும் உரிமையும் எண்ணிப்பார்க்க எவ்வளவு இரம்மியமாக இருக்கிறது.! கற்பனைகளில் ஒரு பேரானந்தம்.!

குதிரை, வேடப்பரை எழுப்ப முனையும்போது, வேடப்பர் விழித்துக்கொள்வது செம்மையான இரசனை. குதிரை பயணிக்கும் வேகத்தை சொர்க்கோர்வைகளில் மனக்கண்ணில் அழகாக நிகழ்வின் விறுவிறுப்பும் படபடப்பும் மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வேடப்பரின் மனம் தன் தவறை எண்ணி துடித்துக்கொண்டே இருக்கிறது. தான் கடைசி நேரம் வரை பிராதை காணாமல் விட்டதை எண்ணி வெடிக்கிறார். குல கடவுளின் மனம் எவ்வளவு இளகியதாக இருக்கிறது பாருங்கள்.! தன் மக்களைப் பற்றி நன்கு உணர்ந்துள்ள வேடப்பர் குதிரையிடம் பேசும் இன்னொரு வசனம், இதோ:

“ஒனக்கு இந்த பொம்னேட்டிவுள பத்தி ஒண்ணும் தெரியாது. நொடிக்கு நொடி அவளுவுளுக்கு யோசன மாறும். அதனாலதான் எனக்கு அடிச்சிக்கிட்டுக் கெடக்கு. அதிலியும் ஆதுபாது அத்தவ அவ. மனங்கெட்டாப்ல ஒண்ணு…” அதற்கு மேல் அவரால் சொல்ல முடியவில்லை.

வேடப்பரும் அவர் சார்ந்த நிகழ்வுகளும் கற்பனை என்றாலும், தனமணி அம்மாளை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் எதார்த்தம்.  தனமணி மகள் அவளுடைய அண்ணன் மகனை விரும்புவதை அரசல்புரசலாக கேள்விப்பட்டு, மகள் செல்வராணியிடம் பேசும் வசனமாகட்டும், தனமணிக்கும் அவளுடைய அண்ணிக்கும் இடையேயான உரையாடலாகட்டும் அனைத்தும் யதார்த்தத்தை, இயல்பை அப்படியே தாங்கி வருகிறது.

" எனக்குன்னு யாரு இருக்கா அண்ணி? ஒங்கள வுட்டா எங்களுக்கு நாதி யாரு? எனுமோ களகாம்பு வெட்டி அஞ்சி பவுனு குருவி சேக்கற மாதிரி சேத்துவச்சிருக்கேன்...".
" என்னா நொள்ள அஞ்சி பவுனு. ஏம் முந்திரியில ஒத்த சிம்பு காய்க்கும் அது. " அண்ணிக்காரி ஓடரித்தாள்.

அடுத்து,

"நொட்டனா மாமனதான் நொட்டுவன் இல்லனா உயிர மாய்ச்சிக்குவன்னு சவடால் மயிறு வேற. தே பூட்டுது. வேடப்பன் பாப்பான்னு நடையா நடந்தன. சூத்து பெரிசா இருக்கற பொம்னேட்டி எழுதிக் கட்டியிருந்தா இந்நேரம் வந்து பாத்துருப்பான். என்னப் பாத்தா அவனுக்கு எளக்காரமா இருக்கு போல்ருக்கு."

கடுப்பாயிட்டா கடவுளா இருந்தாலும் மரியாதை கிடையாது.  "அந்த கடவுளுக்கு என்ன கண்ணா அவிஞ்சி போச்சுனு" சர்வ சாதாரணமாக நடுநாட்டு கிராமாங்களில் பேச கேட்கலாம்.  இப்படி கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான பாசமும், கோவமும், உரிமையும் வெகு இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.  பேராற்றல் கொண்ட மனிதர்கள் இந்த கடவுள்கள்.

இச்சிறுகதையின் உச்சக்கட்டம் வேடப்பரின் "சலங்கை சத்தம்".  இது கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் இம்மாதிரியான சலங்கை சத்தத்தைக்  கேட்க முடியும்.  இச்சிறுகதையை எளிதாக கற்பனை என்று கடந்துவிட முடியவில்லை. ஏனெனில் இயல்பில் இன்னமும்கூட இப்படிதான் அழகாக இருக்கின்றன சில கிராமங்கள்.

மற்றுமொரு முக்கிய சேதி, வேடப்பர் திருடனை கண்டுபிடித்து, அவன் மீது ஆந்திரங்கொண்டு வாள் வீசும் முன் சுதாரித்து முந்திக்கொண்டு திருடனை கண்டிப்பதுவும், அதற்கு சொல்லப்படும் காரணமும் மிக அருமை.

சிறப்பான ஒரு படைப்பு. நிச்சயம் படிக்கலாம்.

நன்றி.

==================================================
நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :

தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 14.
மின்னஞ்சல் : tamizhininool@yahoo.co.in
இணையதளம்:  www.tamizhini.com

இணையம் வழியாக பெற பின்வரும் இணைப்புகளை சொடுக்கவும்:
உடுமலை.கொம்   => https://www.udumalai.com/poorani-porkalai.htm
நூல் உலகம்      => http://www.noolulagam.com/product/?pid=27057#details