திங்கள், 13 ஜனவரி, 2014

கட்டபொம்மனுக்கு ஏன் பிற பாளையக்காரர்கள் உதவவில்லை..!?



கட்டபொம்மனுக்கு ஏன் பிற பாளையக்காரர்கள் உதவவில்லை..!? கட்டபொம்ம நாயக்கனின் இன்னொரு முகம்.

கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்றை படிக்கும்போது கட்டபொம்மனுக்கு உதவாத பிற பாளையக்காரர்கள் மீது கண்டிப்பாக நமக்கு வெறுப்புணர்ச்சி எழுந்திருக்கும். கிட்டதட்ட பிற பாளையங்கள் அனைத்தும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிவில்லாமல் இருந்தார்கள், கட்டபொம்மனுக்கு மட்டுமே அத்தகைய துணிவிருந்தது என்கிற மாதிரியாக கட்டபொம்மன் வரலாற்று கதைகள் அனைத்துமே அமைந்திருக்கும். 

போதாகுறைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், கட்டபொம்மன் இருந்திருந்தால் “உண்மையிலேயே என்னால் கூட இந்த அளவிற்க்கு சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது, அவ்வளவு அருமையாக நடித்துள்ளீர்கள்” என பாராட்டியிருப்பார். அவ்வளவு தத்ரூபமாக அத்துனை பேரையும் உடல் சிலிர்க்க வைத்து நடித்துவிட்டார்.

கட்டபொம்மன் ஆட்சி செய்தது குறுகிய பகுதிகளை மட்டுமே. பாஞ்சாலங்குறிச்சியை விட பெரிய பெரிய பாளையங்கள் இருந்தன. அவற்றை ஆட்சி செய்தவர்கள் கட்டபொம்மனை விட பல மடங்கு பலம் பொருந்திய வீரர்களாக இருந்துள்ளார்கள். இருப்பினும் ஏன் இவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து கட்டபொம்மனுக்கு உதவவில்லை..!!? கட்டபொம்மன் கதையை படிக்கும்போது பிற பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க பயந்தார்கள் என மொட்டையாக ஒரு காரணம் நமக்குள்ளே தானாகவே தோன்றியிருக்கும்.

அதுமட்டுமில்லாது “வீரபாண்டிய கட்டபொம்மன்” தொடங்கி கற்பனை அரசன் “இம்சை அரசன் 23ம் புலிகேசி” வரைக்கும் ஆங்கிலேயரை ஆதரிப்பவர்கள் கட்டபொம்மனின் பேரைக்கேட்டாலே அஞ்சுவர் என்பது மாதிரியான மாயையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அப்படி அல்ல. உதாரணமாக, கட்டபொம்மன், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள் அரண்மனைக்கு சென்றால் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கும்பிட்டுவிட்டுதான் எழுந்து பேச முடியுமாம். நிலை இப்படி இருக்கும்போது கட்டபொம்மன் பேரை கேட்டவர்கள் அனைவரும் அஞ்சினர் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அப்படிதான் இங்கு திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி தலைப்புக்கு வருவோம். ஏன் மற்ற பாளையக்காரர்கள் கட்டபொம்மனுக்கு உதவவில்லை..!? எனக்கு இரு பாளையக்காரர்களை பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது.

முதலில் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களைப் பற்றிய செய்தியை காணலாம். அப்போது அப்போது ஏழாயிரம் பண்ணை திவான் சமூகத்தவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. ஏழாயிரம் பண்ணை அரசராக முத்துசுவாமி ஆண்டுகொண்டார் அவர்கள் இருக்கிறார்.

ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். தலைமுறை தலைமுறையாக பாண்டியனின் அரசவைக்கு சென்றால் பாண்டியன் தன் அரியனைக்கு இணையான ஆசனத்தில் அமரவைத்து மரியாதை கொடுத்து பேசுவதுதான் வழக்கம். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள்.

இவ்வாறான சிறப்புகளோடு சிறப்பாக ஆட்சி செய்து வரும்போது, அதுவரை ஏழாயிரம் பண்ணை பாளையக்காரரை கும்பிட்டு கைகட்டிக் கொண்டு நின்றிருந்த பாஞ்சாலங்குறிச்சி  கட்டபொம்ம நாயக்கர், கும்பிடும் பழக்கத்தை நிறுத்தித் தமக்குப் பாளையக்காரரோடு சமமாக அமர அனுமதி வழங்கவேண்டுமென்று ஆள் அனுப்பி பேசி வரும்படி செய்கிறார். ஆனால் அரசர் அதனை ஏற்க மறுத்துவிடுகிறார்.

இம்மரியாதையை வலுக்கட்டாயமாக பெற எண்ணிய கட்டபொம்மன், அப்போது தெற்குச் சீமைக்கு வந்திருந்த  பாருகானிடம் சிறிது பணம் கையூட்டாக கொடுத்து, தாம் ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்ளப் போவதாகவும், அது குறித்து அப்பாளையக்காரர் முறையிட்டால், பாருக்கான் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டுமென கேட்டு தனக்கு பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார் கட்டபொம்மன்.

தனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட கட்டபொம்மன் தனது சேனையுடன் வந்து ஏழாயிரம் பண்ணை பாளையத்தை சேர்ந்த சில கிராமங்களில் கொள்ளையிட்டு, மக்களை குத்தி, வெட்டி அனேக உயிர்களை வதை செய்துவிட்டுப் போகிறார்.

சேதி அறிந்து மனம் நொந்த அரசர், திவான் சமூகத்துக்கு தெரிவிக்கிறார். கையூட்டு பெற்ற கயவர்களென்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. தம் மக்களின் நலம் காக்க விரும்பிய அரசனாக திவான் சமூகத்துக்கு கொடுத்துவந்த காணிக்கையை நிறுத்திவிட்டு தனது நாட்டு மக்களின் பாதுகாபிற்க்காக ஆங்கிலேயரின் பக்கம் திரும்பிவிடுகிறார் ஏழாயிரம் பண்ணை அரசர்.

அடுத்தது சிவகிரி பாளையம். ஏழாயிரம் பண்ணையில் முத்துசுவாமி ஆண்டுகொண்டார் அவர்கள் அரசராக இருந்தபோது சிவகிரி பாளையத்தின் அரசராக இருந்தவருக்கும்(பெயர் தெரியவில்லை) அவரது குமாரருக்கும் பிணக்கு ஏற்பட்டு பாளையக்காரரின் மகனும் அவருடைய மைத்துனன் கறுப்பு வன்னியனும் சிவகிரி பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். கறுப்பு வன்னியன் மட்டும் தம் மனைவியுடன் வந்து ஏழாயிரம் பண்ணை பாளையத்தில் தங்குகிறார்.

ஒரு நாள் தம் மனைவியை மட்டும் விட்டுவிட்டு பக்கத்தில் ஓரிடம் சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற கறுப்பு வன்னியன், பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று, அங்கு யாதோ இரகசியமாய்ப் பேசி முடிவெடுத்துக்கொண்டு, அங்கிருந்து கட்டபொம்மு சேனைகளைக் கூட்டிக்கொண்டு ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் பக்க வழியாக சிவகிரிக்குப் போகிறவன் எளையரசனேந்தலில் இருந்துகொண்டு ஏழாயிரம் பண்ணைக்கு தூது அனுப்பினார்.

அவருக்கு துணையாக ஏழாயிரம் பண்ணை சேனையை அனுப்பவில்லையென்றால், ஏழாயிரம் பண்ணை பாளையத்தை சார்ந்த சில ஊர்களை கொள்ளையிட்டுவிடுவோம் என்று பயமுறுத்திவிட்டு, ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் அம்மையாபட்டியை கொள்ளையிடுகிறார்.

சிவகிரி பாளைத்திற்க்கு எதிராக போரிடுவதற்க்கு தனது படையை அனுப்ப மறுத்து, இவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்க சேனையை அனுப்புகிறார் அரசர் முத்துசாமி ஆண்டுகொண்டார்.

இப்படி அருகிலிருக்கும் பாளையங்களின் பகுதிகளை கொள்ளையடிப்பதுவும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதுவும், அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடுவதுமாக இருந்த ஒருவனுக்கு உதவ பிற பாளையக்காரர்கள் எப்படி முன்வருவார்கள்...!!?

செய்யறதெல்லாம் மொள்ளமாரித்தனமும் முடிச்சவிக்கிதனமும் செஞ்சிட்டு அடுத்தவங்கள குறை சொல்றது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இதுக்கு முன்னாடி கட்டபொம்மனைப் பற்றிய ஒரு தகவல் படிச்சிருந்தேன். அதாவது, கட்டபொம்மன் அதிகமாக கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபடுவதாகவும் எனவே கட்டபொம்மனை கைது செய்து சிறையிலடைக்க ஆணை வழங்கக்கோரி திருநெல்வேலி பகுதி பொருப்பாளராக இருந்த ஒரு வெள்ளைக்காரன் சென்னையில்(Madras) இருந்த தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதம் அது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மனசு அப்போது ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், இப்போது உள்ளூர் தகவல்களே இப்படி கிடைக்கும்போது ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

நன்றி  :
      
1. தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், “வன்னியர்” (வரலாற்று ஆவண நூல்      
       2. தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், “வன்னியர் மாட்சி”
       3. திரு. செல்வமணி, “தென்னிந்திய புரட்சியாளர்கள்”

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வலை பதிவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. unmai.sivaji kattapomman padamthan avanai nallavan enru nambavaithathu

      நீக்கு
    3. @Sunmugan Thondaiman : தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. வரலாற்று புரட்டுகளை இனம் கண்டு தோண்டி எடுத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எங்கும் தமிழர்களின் இலக்கிய,சமய;அரசியல் பற்றிய குறிப்புச் செய்திகளில் நிறைய இட்டுக்கட்டலும், இயைந்த வண்ணமும் கூறும் தன்மையும், தம்மைத் தாமே பெருமைப்படுத்தலும், மிக உயர்த்துதலும், மாற்றிக் கூறுதலும் உண்டென்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
    மேற்கு நாடுகளில் ஆயிரம் ஆண்டு பழைமையானதற்கும் தெளிவான இன்றைய காலத்தவரும் எளிதில் வாசித்து விளங்கக் கூடிய எழுத்துச் சான்றுண்டு-எல்லோரும் பார்க்கும் வண்ணம் வைத்துள்ளார்கள், ஆனால் நம் நாடுகளில் சாதாரண நம்மால் புரிந்து கொள்ள முடியாத கல்வெட்டுக்கள், அவற்றை வாசிக்கக் கூடிய சிறப்புத் தகுதி வாய்ந்தோர், கூறுவதையே ஏற்கவேண்டிய நிலை சகலருக்கும்.
    அரசாங்கத்துக்காகவும், ஆட்சியிலுள்ளோருக்காகவும், (ஆ ) சாமிகளுக்காகவும்,பணம் படைத்தோருக்காகவும் எம் கண்முன்னே சட்டத்தையும், யாவற்றையும் வளைக்கும், மாற்றும் இச் சமூகம்
    அரசனே தெய்வம் என்று மண்டியிட்ட காலத்தில் என்னென்னல்லாம் செய்திருக்கும்.
    இதையெல்லாம் படித்துப் இன்புறவேண்டியதே!





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      /* ... நிறைய இட்டுக்கட்டலும், இயைந்த வண்ணமும் கூறும் தன்மையும், தம்மைத் தாமே பெருமைப்படுத்தலும், மிக உயர்த்துதலும், மாற்றிக் கூறுதலும் உண்டென்பது ...*/ இது தமிழர்களிடம் மட்டுமல்ல அதிகாரத்தில் இருந்துவந்த உலக மக்கள் அனைவரிடத்திலும் இருந்திருக்கும்.

      /* மேற்கு நாடுகளில் ... எளிதில் வாசித்து விளங்கக் கூடிய எழுத்துச் சான்றுண்டு ... சாதாரண நம்மால் புரிந்து கொள்ள முடியாத கல்வெட்டுக்கள், அவற்றை வாசிக்கக் கூடிய சிறப்புத் தகுதி வாய்ந்தோர், கூறுவதையே ஏற்கவேண்டிய நிலை சகலருக்கும். */ கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, பாரசீகம் போன்ற மொழிகளின் பண்டைய எழுத்து வடிவங்கள் இன்றும் அனைவராலும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணம்தான் அமைந்திருக்கின்றனவா..!!!?

      /*வாசிக்கக் கூடிய சிறப்புத் தகுதி வாய்ந்தோர், கூறுவதையே ஏற்கவேண்டிய நிலை சகலருக்கும்.*/ இது மேற்கூறிய மொழிகள் உள்ளிட்ட பண்டைய மொழிகள் அனைத்திற்க்குமே பொருந்தும்.

      ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப்பற்றி பரவலாக ஒரே மாதிரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை உண்மையாக இருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகம்.

      நீக்கு
  4. 23ம் புலிகேசியில் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லி இருப்பார்கள். வரலாறு முக்கியம் அமைச்சரே...,



    யார் எதை வேண்டுமானாலும் எழுதி விடலாம். சில வருடங்கள் கழித்து படிக்கும் சிலருக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். அதில் சிலர் உண்மைதான் என வாக்குவாதம் செய்வார்கள்......, அதற்கான காரணத்தை வைப்பார்கள். சில ஆண்டுகள் கழித்து அந்த வாதத்தில் வரும் காரணங்கள் உண்மையாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டுவிடும். சில ஆண்டுகள் கழித்து மூல நிகழ்வும் உண்மையெனக் கொள்ளப் படும். அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      உண்மைதான்...

      ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப்பற்றி பரவலாக ஒரே மாதிரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை உண்மையாக இருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகம்.

      ஆகவே வரலாற்று உண்மைகள், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே நிரூபிக்கப்படுகின்றன.

      நீக்கு
  5. //தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், “வன்னியர்” (வரலாற்று ஆவண நூல்
    . தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், “வன்னியர் மாட்சி”///



    இந்த “தொல்லியல் நிபுணர்” நடன காசிநாதன் வன்னிய சார்பு எழுத்தாளர்/ஆராய்ச்சியாளர் என்று நம்புகிறேன். அவரது ஒரு கட்டுரையில் சோழர்கள் வன்னியர்கள் தான் என்று வாதாடி விட்டு, வேறு யாரவது அதற்கு எதிராக தக்க சான்றுகளைக் காட்டினால் பரிசீலிக்கப்படும் என்று எழுதினார் அப்படியானால் அவரது வாதங்களிலேயே அவருக்கு உறுதியான நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறது. அது ஒருபுறமிருக்க, இவர் சோழர்களைப் பற்றிய ஒரு கட்டுரையில் “ பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட செப்புப்பட்டயம் ஒன்று கூடக் கிடைக்காமலிருப்பதும், இவன் பிராமணர்கள் மீது கொண்ட வெறுப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது” என்கிறார் என இவரது கட்டுரை - இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் என்ற நூலில் Page 73 இல்- மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இராஜ ராஜ சோழனது பிராமணச்சார்பும், ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்கள் பல நிலங்களை நன்கொடையாகப் பெற்றனர் என்பதும் பல ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுடுள்ளது. அதை விட திரு.நடன.காசிநாதனும் வன்னியர் சாதியோ என்னவோ எனக்குத் தெரியாது, ஆனால் வன்னியர்கள் தாம் சத்திரியர்கள் என்று வாதாடுவதால் இவரும், தமிழ்நாட்டு மன்னர்களைக் குறிப்பாக, சோழர்களை சத்திரியர்களாகவும், அவர்களின் போர்களை, உதாரணமாக காந்தளூர்ச் சாலைப் போரை, சத்திரிய –பிராமணப் போராக அதாவது சாதிப் போராக நிறுவி, சாதியை முன்னிறுத்துபவர் போல் தெரிகிறது. அதனால் அவரது எழுத்துக்களை மட்டும் நம்பி, அதாவது அவர் வன்னியர்களைப் புகழ்ந்து எழுதிய நூல்களை நம்பி, கட்டபொம்மனை சிறுமைப்படுத்துவது சரியானதொன்றாக எனக்குப் படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      /* ... அப்படியானால் அவரது வாதங்களிலேயே அவருக்கு உறுதியான நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறது. */ அவர் ஓரு ஆராய்ச்சியாளர். கிடைக்கும் தகவல்களை கொண்டு, அத்தகவல்கள் எதை சுட்டுகிறது என ஆராய்ந்து வெளியிடுவதுதான் ஆராய்ச்சியாளனின் வழக்கம். அதனடிப்படையிதான் சோழர்கள் வன்னியர்கள் என நிறுவியிருக்கிறார்.

      உங்களிடம் ஏதேனும் வேறுவிதமான தகவல்கள் இருந்தால் அதை பரிசீலிப்பதாக ஒரு ஆராய்ச்சியாளனாக சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். அவருக்கு கிடைத்திருந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில் சோழர்கள் வன்னியர்கள் என்று எழுதியிருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கையை சார்ந்தது அல்ல.

      மேலும், சோழர்கள் வன்னியர்கள் என்று அவர் சொல்லவில்லை. அவரிடம் இருக்கும் ஆதாரங்கள் சொல்கின்றன.

      -------------------------
      நான் இந்த பதிவில் கூறியிருப்பவை நடன.காசிநாதன் சொல்பவை அல்ல. அவர் தொகுத்திருக்கும் தகவல்கள்(ஆதாரங்கள்) தெரிவிப்பது. அவருக்கு கிடைத்திருந்த தகவல்களை அச்சில் ஏற்றியிருக்கிறார் அவ்வளவே.

      நீக்கு
  6. எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றிங்க அப்பாத்துரை அவர்களே.தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மகிழ்வான பொங்கல்நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி.

      நான் அப்பாதுரை இல்லீங்க.. "அன்பு துரை".

      நீக்கு
  7. கோவிந்த ராசு திருப்பூர்27 மார்ச், 2018 அன்று PM 7:02

    ஏர்க்கால் கட்டபொம்மன் என்று இனையத்தில் பாருங்கள் பகிருங்கள்

    பதிலளிநீக்கு
  8. கோவிந்த ராசு திருப்பூர்27 மார்ச், 2018 அன்று PM 7:03

    ஏர்க்கால் கட்டபொம்மன் என்று இனையத்தில் பாருங்கள்

    பதிலளிநீக்கு