வியாழன், 7 மார்ச், 2013

தொல்.திருமாவளவன் : பேச்சும் எனது எண்ணமும்.

//**
மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.
 
அவர்,  ‘’அனைத்துக் கட்சி நண்பர்களும் இங்கு பேசும்போது ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை எடுத்துச் சொன்னார்கள். இலங்கையை கண்டித்தால் இருநாட்டு நட்புறவு பாதிக்கும் என்று இந்தியா கவலைப்படுகிறது. அங்கே ஒரு இனம் அழிந்து வருவது பற்றி நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம். எனவே, இனியும் இலங்கையை நட்பு நாடாக இந்தியா கூறி வருவது வேதனை அளிக்கிறது.
 
ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்ற அந்த சம்பவம் வெட்கக்கேடானது. ராஜீவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாநிலங்களைச் சேர்த்து ஒரே மாநிலமாக அமைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சிங்கள அரசு அதனை வடக்கு, கிழக்கு என தனி மாநிலங்களாக பிரித்ததன் மூலம் ராஜீவ் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை.


தமிழக மீனவர்கள தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். இதுவரை ஏராளமான மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியிருக்கிறார்கள். நேற்று கூட துப்பாக்கி சூட்டில் நாகை மீனவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். 30 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இன்னும் வாடுகிறார்கள். இதுதான் நட்பு நாட்டின் இலக்கணமா?


இன்னைக்கு நீங்க எனக்கு ரொம்ப புடிச்ச மாதிரி பேசியிருக்கீங்க..
 
அங்கு இலங்கை அரசு மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவேயில்லை. இலங்கை நடத்தியிருப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்கும் செயல். தமிழ் இனம் முழுவதையுமே அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே அரசு நடந்துகொண்டிருக்கிறது.


ரொம்ப தாமதமா இந்திய நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ள வாசகங்கள் இவை. இருந்தபோதிலும் உமக்கு நன்றிகள்..
 
இந்தியா ஒரு பெரிய நாடு. இலங்கையில் நடந்து வரும் இந்த படுகொலைகளை ஏன் இன்னும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? ஜெனிவா மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள். அது ஒரு உப்புச்சப்பு இல்லாத தீர்மானம். தமிழர்கள் நச்சுக்குண்டு வீச்சில் அழிக்கப்பட்டனர்.
 
எனவே, இந்த கொலைகாரர்கள் சர்வதேச நீதிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். இன்னும் தலையிடாமல் இருக்கக்கூடாது.


இதை நீங்க உண்மையிலேயே உங்க உள்மனசுலேர்ந்து சொல்றீங்களோ இல்ல அரசியலுக்காக சொல்றீங்களோ..!! என்ன கத்து கத்தி கூப்பாடு போட்டாலும் சோனியா அரசாங்கம் கண்டுகொள்ள போவதில்லை.. 

இத்தனை கொடுமை செய்தவர்களுக்கு இந்தியா வரும்போது ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுப்போம். அங்குள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி  கொடுப்போம் என்றெல்லாம் சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி தமிழனின் வலியை கேளிக்கையாய் வேடிக்கை பார்த்தவர்கள். இவர்கள், இலங்கை அரசை கூண்டிலேற்றுவார்களா..!!? நம்மைதான் குற்றவாளியாக்கி கூண்டிலேற்றி குறுக்கு விசாரணை இல்லாமலே தண்டனையும் வாங்கி கொடுப்பார்கள்..
 
செப்டம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று 117 இங்கிலாந்து எம்.பி.க்கள் கூறியிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது.

இங்கிலாந்தில் இருப்பவர்கள் கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள்னு நெனக்கிறன். நம்ம ஆளுங்களுக்கு அது கிடையாது..
 
இன்னும் இலங்கை நட்பு நாடு என்று இந்தியா அடம்பிடிக்குமேயானால் நாங்கள் இந்தியர்கள் இல்லை என்று தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சொல்லும் நிலை உருவாகும்.

நான் இதை எப்பவோ சொல்லிட்டேன். என்னோட நாடு இந்தியானு சொல்ல அசிங்கமா இருக்கு. அதனால இப்பலாம் என்னோட நாடு தமிழ்நாடுனுதான் சொல்லிகிட்டு இருக்கேன்..
 
இலங்கையில் பாலச்சந்திரன் என்ற 12 வயது குழந்தை மட்டுமல்ல, பெண்கள், ஏராளமான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் காரணமாகக் காட்டி ஒரு இனத்தைப் பழி வாங்க இலங்கை அரசை அனுமதிக்கக்கூடாது.

இந்த வெங்காயங்கள் இதற்க்கெல்லாம் செவிசாய்க்க போவதில்லை..
 
இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும்.


இலங்கைக்கு எதிராக தனிதீர்மானம் கொண்டுவந்தா மகிழ்ச்சியடையலாம். நாம சந்தோசப்பட்டா மத்திய அரசாங்கத்துக்கு புடிக்காதே. அப்புறம் எப்படி செய்வாங்க..!!? 

இந்தியாவை தாய்நாடாகக் கருதி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா மாற்ற வேண்டும்’’ என்று பேசினார்.

எனக்கு என்னமோ பிரிவினையை உண்டுபண்றீங்கனு சொல்லி இந்திய புலனாய்வு துறை மூலமா உங்களை கைது பண்ணுவாங்கனு நெனைக்கிறேன்..
**//  

குறிப்பு : திருமாவளவன் நடிக்கிறார், அரசியலுக்காக இப்படி பேசுகிறார் சொல்றவங்களுக்கு :  அவர் உண்மையில் நடிக்கவே வேண்டுமானாலும் செய்யட்டும். அவர் சுத்தமான தமிழன். உண்மையை அறிந்த ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் நிச்சயம் குமுறிக்கொண்டுதான் இருக்கும். அவர் இருக்கும் இடமும், சூழலும் அவரது வார்த்தைகளையும் செயல்களையும்  ஒருவேளை கட்டிப்போடலாம். ஆனால், தமிழனின் ஆதங்க உணர்வு நிச்சயம் அவருள் இருக்கும்.  

நான் எதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க.. 

நன்றி : கூகிள்[படம்], நக்கீரன்[செய்தி-சிவப்பு வண்ணத்தில் இருப்பவை]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக