செவ்வாய், 10 ஜூலை, 2012

எனது ஊர் : கீழூர் - சிங்கநகர் (செவி வழிச் செய்தி)

கி.பி 17-18 ம் நூற்றாண்டின் ஒரு சமயத்தில், தற்ச்சமயம் பாச்சாரப்பாளையம் எனப் பெயர் கொண்டிருக்கும் ஒரு ஊரினை தலைமை இடமாக கொண்டு பாளையக்காரர்கள் வம்சத்தில் வந்த ஒரு அரசர் ஆட்சி புரிந்து புரிந்துகொண்டிருந்தார்.

ஒரு நாள் பாச்சார பாளையத்திலிருந்து வடக்கு திசை நோக்கி தனது வீரர்களுடன் வேட்டைக்காக புறப்பட்டார் அரசர். தாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு 1 கி.மீ தூரத்தை அடைந்த போது, ஒரு காட்டு முயலை கண்ட அரசர் தனது வேட்டை நாயை முயலை பிடித்து வர ஏவினார்.


அந்த சமயத்தில் தான் அந்த ஆச்சரியமும் நிகழ்ந்தது. வேட்டை நாயை சற்றும் எதிர்பாராத அந்த முயல் தப்பி ஓட முயற்ச்சிக்கும் என எதிர்பார்த்த மன்னருக்கும் வீரர்களுக்கும் முகத்தில் கரி பூசினாற்போல் வேட்டை நாயை எதிர்த்து நின்றதாம் அந்த காட்டு முயல். முயலை கவ்வி பிடிக்க போன வேட்டை நாயை விரட்டி அடித்ததாம் அந்த காட்டு முயல்.


இதை சற்றும் எதிர்பாராத மன்னர் ஆச்சரியம் கொண்டு, வேட்டை நாயையே ஒரு காட்டு முயல் விரட்டியடிக்கிறது எனில் இம்மண் எவ்வளவு வீரம்  செறிந்ததாக இருக்க வேண்டும் என கூறி அகமகிழ்ந்து போனாராம்.

வேட்டையை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்பிய அரசர், அடுத்த சில தினங்களில் தனது படை பரிவாரங்களுடன் அரண்மனையை முயல் வேட்டைநாயை எதிர்த்த அந்த இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை "சிங்க நகர்" எனப் பெயரிட்டு அழைத்துவந்தனராம்.

சிங்க நகர் எனப் பெயர் பெற்றிருந்த ஊருக்கு கீழூர் எனப் பெயர் வந்தது எப்படி என்பதைப் பற்றி தெரியவில்லை.


ஆதாரம் : கீழூர் பாளையக்காரர்களின் வம்சத்தில் தற்போது உள்ளவர்களில் இருவரிடமிருந்து மட்டும் தனித்தனியே கேட்டுப் பெறப்பட்ட செய்தி இது. இருவருமே மேற்சொன்ன ஒரே நிகழ்வையே சொல்லினர். மேலும் இது செவி வழி செய்தியாக மட்டுமே இருக்கிறதேயொழிய, கல்வெட்டுக்களோ எழுத்துப்பூர்வமான ஆதாரங்களோ எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக