திங்கள், 9 ஜூலை, 2012

நான் பா.ம.க ஆதரவாளன்.. ஏன்?

           எனக்கு மருத்துவர் இராமதாசை பிடிக்காது. அவரது பெயரை கேட்டாலே ஒரு விதமான வெறுப்பு தோன்றும். ஏன் பிடிக்காது? எதனால வெறுப்பு? னு கேட்டிங்கனா பதில் தெரியாது. நண்பர்களுடன் அரசியல் பேசும்போது தேவையே இல்லாம அவரை திட்டி பேசுவன். ஏன் பேசுவன்னு தெரியாது. ஆனால் அவை எல்லாமுமே தலைகீழாக முற்றிலுமாக மாறியது என் முதுநிலை பட்ட படிப்பின் இறுதியாண்டிற்குப்  பிறகு. எப்படி என்பதை இனி பார்க்கலாம்.
           நான் முதுநிலை தொழிற் சார்ந்த பட்ட படிப்பின் இறுதி ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்ட வேலையை(Project Work) ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான நிறுவனத்தில் மேற்க்கொண்டேன். அங்குதான் இதுவரையில் இல்லாத ஒரு புதிய பழக்கம் எனக்கு ஏற்ப்பட்டது. தினமும் இணையத்தில் செய்தித்தாள்களைப் படிப்பது.அப்படி எனக்கு பழக்கமான முதல் பத்திரிக்கை "தின மலர்".
           நான் இன்று இராமதாசுவை ஆதரிப்பதற்கு மிக முக்கிய இன்றியமையாத காரணங்களில் தினமலரும் அதன் வாசகர்களும் மிகவும் முக்கியமானவர்கள். அப்போதெல்லாம் தினமலரில் தினமும் மருத்துவர் இராமதாசைப் பற்றி செய்தி வரும். பெரும்பாலான செய்திகள் மறைமுகமாக மருத்துவர் இராமதாசையும் பா.ம.க வையும் குறை சொல்வதாகவே இருக்கும்.
அப்படி வரும் செய்திகளில் விசேடம் என்னவென்றால், மத்த எந்த செய்திக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கருத்துரைகள் இராமதாசு சம்மந்தப்பட்ட செய்திகளில் இருக்கும்.
           அங்கு எழுதப்படும் கருத்துகள் பெரும்பாலும் மருத்துவர் சொல்லியிருக்கும் கருத்தை ஆதரித்தோ எதிர்த்தோ இருக்காது, அவரை கண்ணா பின்னாவென திட்டித்தான் எழுதியிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் அவரை திட்டி எழுதும்போது பயன்படுத்திய வார்த்தை "மரம் வெட்டி".ஆனால் இப்பலாம் யாராவது மரம் வெட்டினு சொன்னா எனக்கு வரும் கோவத்துக்கு அளவே இருக்காது.
           அவர மரம் வெட்டினு சொல்றதுக்கு காரணம், 1987 ல வன்னியர் சங்கத்தால நடத்தப்பட்ட போராட்டத்துல மரங்கள் வெட்டப்பட்டதுதான். 
அந்த சமயத்துல எனக்கு வன்னியர் சங்க போராட்டத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது.
           வன்னியர் சங்க போராட்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்க "கூகிள்" இணையதளத்துல தேட ஆரம்பிச்சேன். அப்படி நான் தேடியதில் எனக்கு கிடைத்த முதல் இணைப்பு 

1.  திரு.வீர வன்னியன் அவர்களின் வலைப்பூ.
           எனக்கு  மருத்துவர் மீது நல்ல மதிப்பையும், பா.ம.க வின் மீது நல்லதொரு அபிப்பிராயத்தையும் ஏற்ப்படுத்தியது அவரின் பின்வரும் இடுகைகள்:
           1.மறக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 1
           2.மறைக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 2
           3.சாதிக் கட்சிகளை விலக்குங்கள்

வன்னியர் சங்க போராட்டத்தைப்பற்றி வீரவன்னியன் அவர்கள் சொல்லியிருக்கிற கருத்துக்கள் எனக்கு போதுமானதாக தோன்றவில்லை. ஆகவே, மீண்டும் வன்னியர் சங்கத்தைப் பற்றி இணையத்தில் தேடலானேன். 

அடுத்ததாக எனக்கு கிடைத்த இரண்டாவது இணைப்பு அண்ணன்

2திரு.குழலி அவர்களின் வலைப்பூ "குழலி பக்கங்கள்".
           அண்ணன் குழலி அவர்களின் பதிவுகளை படிக்க படிக்க மருத்துவர் இராமதாசு மீதும் பா.ம.க மீதும் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் வன்னியர் சங்க போராட்டத்தைப்பற்றி, திரு.வீரவன்னியன் அவர்களின் பதிவுகளில் இருந்த கிட்ட தட்ட அதே செய்தி தான் இங்கும் இருந்தது.
நான் படித்த அந்த பதிவுகள் இதோ :
        1.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1
        2.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2
        3.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3
        4.மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 4

அண்ணன் குழலியின் பதிவுகள் மருத்துவர் இராமதாசைப் பற்றியும் பா.ம.க வைப் பற்றியும் தெளிவு படுத்தியதே தவிர வன்னியர் சங்க போராட்டத்தைப் பற்றி பெரிதாக நான் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை.

மீண்டும் தேடல் தொடங்கியது, அடுத்து எனக்கு கிடைத்த இணைப்பு அண்ணன்

3. திரு.அருள் அவர்களின் "பசுமை பக்கங்கள்".
           அருள் அண்ணனின் பசுமைப் பக்கங்களிலும் வன்னியர் சங்க போராட்டம் பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் பா.ம.க வைப் பற்றியும் மருத்துவர் இராமதாசைப் பற்றியும் அதிகமாகவே தெரிந்துகொள்ளலாம். மேலும் அனைத்து விவரங்களும் ஆதாரங்களுடன் கிடைக்கும்.

பா.ம.க வின் செயல் திட்டங்கள் : 
           ஒரு நல்ல அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பா.ம.க வின் செயல் திட்டங்கள் நல்ல அடிப்படை.
1. நிழல் நிதிநிலை அறிக்கை
2. புதிய அரசியல் புதிய நம்பிக்கை  

[பா.ம.க வின் நிதிநிலை அறிக்கைக்கான இணைப்பு கிடைக்கவில்லை]
ஓய்வு கிடைத்தால் இந்த இணைப்புகள் அனைத்தையும் படித்து பாருங்கள், பா.ம.க வின் பார்வை எவ்வளவு தெளிவாக இருக்கிறது என அறிய முடியும்.

சுய சிந்தனை:
           1. யாராவது ஒரு ரெண்டு மூணு பேரு ஒரு கட்சிய பத்தி நல்ல மாதிரியா சொன்னா உடனே அவங்களுக்கு ஆதரவுனு சொல்லுடுவியா? 
           2. இல்ல, அந்த கட்சியோட செயல் திட்டங்கள் மட்டுமே போதுமா? ஒரு கட்சிய ஆதரிப்பதற்கு?
அப்டின்னு கேக்கறவங்களுக்கு பதில்: நிச்சயமாக மேற்சொன்ன விடயங்கள் மட்டும் போதாது.
சுய சிந்தனை அப்டின்னு ஒன்னு கண்டிப்பா தேவை. எனது சிந்தனை எனக்கு தெளிவுபடுத்தியது உங்களின் பார்வைக்கு:
       I. நல்ல திட்டம் :
           ஒரு நல்ல கட்சியாக இருப்பதற்கு மக்களுக்கான அவர்களின் திட்டங்கள் சிறப்பாக அமைய வேண்டும்.
இதன் அடிப்படையில் பா.ம.க தான் முதலிடம்.
      II. கட்சியின் கொள்கை சிறப்பு:
           ஒவ்வொரு கட்சியும் தனக்கென சில கொள்கைகளை கொண்டுள்ளது. அந்த கொள்கைகள் மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் படிக்கல்லாக இருக்க வேண்டும்.
           பா.ம.க வின் கொள்கையானது,"பா.ம.க வை விட சிறப்பான கொள்கைகளையுடைய ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருந்தால் நான் பா.ம.க வை கலைத்துவிட்டு அந்த கட்சியில் இணைந்து விடுவேன்" என மருத்துவர் இராமதாசு சொல்லி சவால் விடும் அளவிற்கு பா.ம.க கட்சியின் கொள்கைகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலும் பா.ம.க விற்குதான் முதலிடம்.
     III.போராடும் குணம்:
           மக்கள் நலனை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளின் சில தவறான முடிவுகளை எதிர்த்து, அதிகாரிகளின் அலட்சியபோக்கை கண்டித்து என பல வகைகளில் நம் நாட்டிற்கு போராட்டம் தேவைப்படுகிறது.
போராடுவதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே சம நிலையில் இருக்கின்றன. ஆனால் இங்கு பா.ம.க க்கு ஒரு + என்னவென்றால் மது, புகை, போதை ஆகியவற்றிற்கு எதிராக தீவிரமாக போராடும் ஒரே கட்சியாக பா.ம.க இருப்பதுதான்.
      IV. ஆளுமை திறன் :
           மேற்சொன்ன மூன்று விடயங்களை விட மிக முக்கியமானது ஆளுமை திறன். என்னதான் ஒரு கட்சி சிறப்பான திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தாலும் ஆளுமை திறன் நிறைந்த ஒருவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்காவிடில் அக்கட்சியை ஆதரிப்பது வீண். இந்த நிலையில் பா.ம.க வின் முதல்வர் வேட்பாளராக இருப்பவர் மருத்துவர்.அன்புமணி இராமதாசு.

i) அன்புமணி இராமதாசு ஆளுமை திறன் மிக்கவரா?
    நிச்சயமாக ஆளுமைத் திறன் மிகுந்தவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு.
எப்படி?
உதாரணமாக இரண்டு விடயங்கள்:

  • பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம்.
  • 108 அவசர ஊர்தி திட்டம்.
        a).பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம்:
                 இந்த சட்டம் உலக அளவில் பிரபலமாக பேசப்பட்ட ஒரு திட்டம். இந்த சட்டத்தை கொண்டு வந்ததை விட அதை செயல்படுத்திய விதத்தில்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் ஆளுமைத்திறன் நிரூபிக்கப்படுகிறது. நம்ம நாட்டுல இது மாதிரியான ஒரு நல்ல சட்டம் கொண்டுவர்றதே ரொம்ப பெரிய விடயம். இந்த திட்டத்தை செயல்படுத்தியதில்  அன்புமணியின் ஆளுமை பாராட்டப்படவேண்டியதே. அன்புமணியின் ஆளுமையால் தான் அச்சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் அவர் தனது பதவியை துறந்தபின் இறந்துபோய் இருக்கும் அச்சட்டத்தின் இன்றைய நிலைதான்.
b).108 அவசர ஊர்தி திட்டம்:
     இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த திட்டங்களில் 108 அவசர ஊர்தி திட்டமும் ஒன்று. இத்திட்டம் முதலில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாசின் முயற்ச்சியால் அறிமுகபடுத்தப்பட்டது. மத்த திட்டங்களைப் போல சாதாரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியாது. இத்திட்டத்திற்கான திட்டமிடலில் மூளைச் செலவு மிக அதிகமாகவே தேவைப்பட்டிருக்கும். முதல் கட்டமாகவும் ஒரு சோதனை ஓட்டமுமாகவே முதலில் இந்த 17 மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அன்புமணி தனது பதவியை துறந்தபின் இந்த திட்டம் இரண்டாம் கட்டமாக நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளதா என தெரியவில்லை.[தெரிந்தவர்கள் தெரியபடுத்தவும்]

விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர்.அன்புமணி இராமதாசு:

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் இருக்கு  வேற எதாச்சும் ஞாபகம் வந்தா மறுபடியும் சொல்ரன்.

பா.ம.க வை ஆதரிக்க உந்துதலாக இருந்தவை :
  • தினமலர்-ம் அதன் வாசகர்களும் [முதல் நிலை]
  • வீரவன்னியன் [இரண்டாம் நிலை]
  • குழலி பக்கங்கள் [மூன்றாம் நிலை]
  • பசுமைப் பக்கங்கள் [நான்காம் நிலை]
  • சுய சிந்தனை [தன்னிலை]
குறிப்பு :
           நான் மருத்துவர் இராமதாசை ஆதரித்து எழுதியிருப்பதால், நான் அவரை எந்த தவறும் செய்யாத உத்தமர் என்றோ, மக்களுக்காக மட்டுமே வாழ்பவர் என்றோ சொல்வதாக அர்த்தமில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளுடனும் அதன் தலைவர்களுடனும் ஒப்பிட்டு பார்க்கும் போது பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் இராமதாசும் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர்களாகவே தெரிகிறார்கள். மேலும் ஒரு முக்கியமான விடயம் எனக்கு மருத்துவர் இராமதாசை அய்யா என அழைக்க பிடிக்காது. நான் ஒன்பதாவது படிக்கும் போது தான் அய்யா என்ற வார்த்தை மருத்துவர் இராமதாசை அழைக்க பயன்படுத்தப்படுவது எனக்கு தெரியும். அந்த நிமிடமே அவரை அய்யா என அழைக்க பிடிக்காமல் போனது. அன்று முதல் அவரை அய்யா என சொல்லி ஒரு முறை கூட நான் நண்பர்களுடனும் சரி வேறு யாருடனும் சரி பேசியதில்லை.
முக்கிய செய்தி : நான் எழுத்துலகத்திற்கும் அரசியலுக்கும் பெரிதாக ஒன்றும் பழக்கமில்லாதவன். நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அன்புடன் என்னை திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன். வன் சொற்கள் வேண்டாம்.

8 கருத்துகள்:

  1. நீங்கள் ராமதாஸின் சிறப்பை மட்டும் பார்க்கிறிர்கள். அவர்கள் ராமதாஸின் தவறுகளை மட்டும் பார்க்கிறார்கள். தவறுகளுக்கு முன்னால் சிறப்புகள் எடுபடாமல் போகிறது என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thanks for your visit and comment... i don't understand that why didn't you use your name.. any way once again thanks to your visit..

      நீக்கு
  2. A gud leader shud stop promoting family members at the cost of community votes.Prof.Dheeran,pu.thaa.elangovan,pu.thaa.arulmozhi sacked frm the party...why?hw he made so much money without active medical practice in recent years?(of course he can't beat karunanithi in terms of billionaire status).wat is AYYA...CHINNA AYYA...?is it symbol of self respect?.....he is just like anyother politician in india who works tirelessly fr family....that is all!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. hi.. thanks for your visit and comment.. if you came here with your name, i would be better.. its ok..

      if you have time, just read the following link. it may give you some answers to your questions.
      http://vanniyarkula-kshathriyar.blogspot.in/2011/12/blog-post_4769.html

      and i don't know about their income and property. in this category all politicians are same...

      நீக்கு
  3. பா.ம.க வின் செயல் திட்டங்கள் பிடித்திருக்கிறது அதனால் பா.ம.க வை ஆதரிக்கின்றேன் என்கிறீர்கள். நல்லது. இதன் காரணமாக ஒரே ஒரு வன்னியர் அல்லாதவரையாவது பா.மாக விற்கு வாக்களிக்க வைக்க முடுயும் என்று நம்புகிறீர்களா. அதை விடுங்கள் குறைந்த அளவு எல்லா வன்னியர்களையும் செயல் திட்டம் சொல்லி வாக்களிக்க வைக்கமுடியும் என்று நம்புகிறீர்களா? சாத்தியமே இல்லை என்பதே நீங்கள் சொல்ல நினைக்கும் பதில்.

    பதிலளிநீக்கு
  4. @ Kalai J : ஏங்க நான் என்ன பா.ம.க வோட கொ.ப.செ வா..! பா.ம.க வுக்கு வாக்களிக்க சொல்ல..
    எனக்கு அவங்ககிட்ட இருக்குற திட்டங்களும், அதிகாரம் இருந்தப்ப அவங்க திட்டங்களை செயல்படுத்தின விதமும் புடிச்சிருக்கு அதனால ஆதரிக்கிறன். அத இந்த பதிவை படிக்கிறவங்களுக்கு தெரியப்படுத்துறன் அவ்ளோதான்.

    பதிலளிநீக்கு