புதன், 19 டிசம்பர், 2012

அம்மா சொல்லிய கதைகள் - 1


இந்த பதிவை படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன் நீங்க உங்களோட குழந்தை பருவத்திற்க்கு போய்விடுவது நல்லது. ஏன்னா இந்த பதிவை குழந்தை மனப்பான்மையுடன் படித்தால் மட்டுமே நல்லா இருக்கும். உங்களுடைய தற்ப்போதைய வயதை கொண்டு படிப்பீர்களேயானால் இப்பதிவு மரண மொக்கையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

நமக்கு சின்ன வயசா இருக்கும்போது, நம்ம எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும். இரவில் நம்மல தூங்க வைக்க அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், பாட்டி, தாத்தா-னு யாராவது ஒருத்தவங்க கதை சொல்லுவாங்க. சில நாட்கள்ல அடம்புடிச்சு கதை சொல்ல சொல்லி தூங்குவோம். சில சமயம் ஏற்கனவே சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்ல சொல்லி கேட்போம்.

அந்த மாதிரி நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்க அம்மா எங்களுக்கு சொன்ன கதைகள் சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்க அம்மா எனக்கு சொன்ன சொன்ன பல கதைகள் மறந்து விட்டன. இருப்பினும், வரும் பொங்கலுக்கு வீட்டுக்கு போய் அம்மாகிட்ட மறுபடியும் கதையெல்லாம் கேட்டுட்டு வந்து ஒவ்வொரு கதையையும் ஒரு ஒரு பதிவா கொடுக்கறன்.

அப்புறம், ஊர்லேர்ந்து எங்க தாத்தா(அம்மாவின் அப்பா) வந்தாருனா, அன்னைக்கு அவர்தான் கதை சொல்லுவாரு. தாத்தா எப்பவும் இராமாயணம், மகாபாரதம்-னு புரானக்கதைகள்தான் சொல்லுவாரு. உதாரனமா, நரகாசூரன் கதை, பத்மாசூரன் கதை, சூரபத்மன் கதை...

அடுத்தது அப்பா, பொதுவாவே அப்பாகிட்ட கதை சொல்ல கேட்டா பல சமயம் அம்மாகிட்ட கேளுனு சொல்லி தப்பிச்சுக்குவாரு. சில நாட்கள்ல நம்ம தொந்தரவு தாங்காம கதை சொல்லியே ஆகவேண்டிய நிலமை வந்துடும். பொதுவா அப்பாவுக்கு கதை சொல்லவே தெரியாது..!!

அந்த மாதிரியான சமயத்துல எங்க அப்பா ஒரு வரி கதை சொல்லுவாரு. தொடக்கத்துல ரொம்ப விறுவிறுப்பான கதை சொல்ல போற மாதிரியே ஆரம்பிச்சு பொசுக்குனு முடிச்சிடுவாரு.

அந்த மாதிரி எங்களுக்கு சொன்ன கதையை உங்களுடன் இப்பதிவின் தொடக்க கதையாக அன்றைய இரவு நிகழ்வுடன் பகிர்கிறேன்.

அப்போ எங்க வீடு கூரை வீடுதான். பனி, மழை அல்லாத காலங்களில் வீட்டின் வாசலில் அமர்ந்து குமிழ் விளக்கு(குண்டு பல்ப்) மற்றும் நிலா வெளிச்சத்தில் விண்ணில் நட்சத்திரங்கள் மின்ன சாப்பிடுவதுதான் வழக்கம்.

பொதுவாக எப்பொதுமே 9 மணிக்கு முன்னதாகவே தூங்க ஆரம்பித்துவிடுவோம். நானும் அண்ணனும் ஆளுக்கு ஒரு புறமாக அப்பாவின் இரு கைகளிலும் தலை வைத்துதான் தூங்குவோம். அப்பா வீட்டில் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகளில் தூங்குவோம்.

அப்படி ஒரு நாள் அப்பாவின் கைகளில் படுத்துக்கொண்டு கதை சொல்ல சொல்லி நச்சரித்துக்கொண்டிருந்தேன். ஏனோ அன்று அம்மாவிடம் கேட்கவில்லை. ஒரு வழியாக அப்பாவும் சொல்ல ஆரம்பித்தார் அந்த ஒரு வரி கதையை..

“ ஒரு ஊர்ல ஒரு நரியாம்..

ம்ம்..

அதோட கதை சரியாம்..!!!!!!!! ”

அப்பா இந்த கதையை சொல்லி முடித்தவுடன் அங்கே சிரிப்பும் சந்தோசமும் ஆரவாரத்துடன் இருந்தது. ஆனாலும் இத்துடன் விட்டுவிடவில்லை மீண்டும் வேறு கதையை சொல்ல சொல்லி அடம்பிடித்து தூங்கினோம். ஆனால் அப்பா அன்று வேறு என்ன கதையை சொன்னார் என்பது நினைவில் இல்லை.

அடுத்த சில நாட்களில் அப்பா சொன்ன அந்த ஒரு வரி கதையை அடிப்படையாக கொண்டு நாங்களும் ஒரு ஒரு வரி கதையை கண்டுபிடித்தோம். அது,

“ ஒரு ஊர்ல ஒரு ரப்பராம்..

அதோட கதை ரிப்பேராம்..!!!! ”

குறிப்பு : அம்மா சொல்லிய கதைகள்-னு தலைப்பை வச்சிட்டு அப்பா சொன்ன கதையை சொல்லியிருகிறேனேனு நெனைக்காதீங்க. அம்மா சொன்ன எந்த கதையும் சரியா ஞாபகத்துல இல்ல. பொங்கலுக்கு பிறகு சொல்றன். எங்க அம்மா எங்களுக்கு பாடிய தாலாட்டு முதற்க்கொண்டு எல்லாத்தையும் சீக்கிரமாவே இங்க பதிவிடவிருக்கிறேன்.


நமது குழந்தை பருவ நினைவுகள் எப்போதும் நமக்கு மகிழ்வையே தரும். நீங்களும் நினைத்துப்பாருங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தை. எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மனம் இலேசாகிவிடும்.


மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில்...

6 கருத்துகள்:

  1. உங்களுக்கு ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவிற்கு மகிழ்ச்சி..
      குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் நன்றிகள்..

      நீக்கு
  2. Boss! Pathivu marana mokkainu neengale sollitinga ;-( unga thairiyam putichirukku boss ;-> :-x senthilrao, Doha qatar :-P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //** இந்த பதிவை குழந்தை மனப்பான்மையுடன் படித்தால் மட்டுமே நல்லா இருக்கும் **//

      வருகைக்கு நன்றி..
      எல்லாம், படிக்கறவங்கள கொடுமைபடுத்திவிடக்கூடாதுங்கற நல்ல எண்ணம்தான்..

      நீக்கு
  3. Amaanga neenga solrathu romb sari than. Namma kuzhanthai paruvam nechu partha romba nalla irukum. Please kandippa pazya kathiagal podunga.. athukkaga wait pannitu iruke rmba aaavaludan.. :)
    Prabha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நிச்சயமாக மிக விரைவில் அடுத்த கதையை எழுதுகிறேன்.

      நீக்கு